Sunday, August 15, 2021

போலியோடு ஜாலியாய் உரையாடினால் . . .

 


கொஞ்ச நாட்கள் முன்பாக மறைந்த தென் மண்டல முன்னாள் தலைவர் தோழர் எம்.எம்.ஜோசப் அவர்களின் பெயரில் ஒரு நட்பழைப்பு ஒரு போலியால் வந்து உரையாடி கேள்வி கேட்டதும் என்னை ப்ளாக் செய்ததை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

சில நாட்கள் முன்பாக திருச்சி தோழர் புகழ் அமுதன் பெயரிலும் ஒரு நட்பழைப்பு வந்திருந்தது. அவர் இவ்வாறு நடப்பதாக முக நூலில் பதிவு செய்திருந்தார். அதனால் அந்த போலியோடு உரையாடத் தொடங்கினேன். ஒரு கேள்வி கேட்டவுடனேயே அவன் ப்ளாக் செய்து ஓடி விட்டான்.

நான்கு நாட்கள் முன்பாக எங்கள் ராஜமுந்திரி கோட்டத்தின் மூத்த தலைவர் தோழர் கே.எஸ்.மூர்த்தி அவர்களின் பெயரிலும் இப்படி ஒரு நட்பழைப்பு. அதைப் பார்த்து பேசுவதற்கு முன்பாகவே அந்த கணக்கு செயலிழந்து விட்டது.

நேற்று இரவு உறங்கச் செல்லும் முன்பாக எங்கள் போளூர் கிளைச்சங்கச் செயலாளர் தோழர் சங்கரிடமிருந்து ஒரு நட்பழைப்பு. ஒரு மணி நேரம் முன்பாகத்தான் ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்ததால் வந்த அழைப்பு மோசடி அழைப்பு என்று தெளிவாகத் தெரிந்தது.



சரி, கொஞ்சம் விளையாடுவோமே என்று நட்பழைப்பை ஏற்றால் அடுத்த நொடியே இன் பாக்ஸில் செய்தி வந்தது. எங்கே உள்ளீர்கள் என்ற கேள்விக்கு அமெரிக்கா என்று பதில் சொன்னேன். கொஞ்சமும் தயங்காமல் கூகிள் பே, போன் பே இருக்கிறதா என்று கேட்க, நான் முந்திக் கொண்டேன். எனக்கு பணம் வேண்டும், ஐயாயிரம் டாலர் வேண்டும் என்று கேட்க மீண்டும் ப்ளாக் செய்து ஓடி விட்டான்.

போலிகளோடு இவ்வாறு விளையாடுவது ஜாலியாகத்தான் உள்ளது, 

போலி என்று தெரிந்த முகமறியாதவர்களோடு இவ்வாறு உரையாட முடிகிற நம்மால், போலி என்று தெரிந்த முகமறிந்தவர்களை எதுவும் செய்ய முடிவதில்லையே!

மோடி ஒரு போலி என்பதை நாம் குறைந்த பட்சம் ஒப்புக் கொள்ளவாவது செய்கிறோமா? 

No comments:

Post a Comment