Tuesday, August 3, 2021

மோடியின் சாதனையில்லை முட்டாள்களே!

 


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் ஐந்து நாடுகள். 

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட அந்த ஐந்து நாடுகள்.

நிரந்தரமில்லாத உறுப்பினர்களாக பத்து நாடுகள் இரண்டாண்டு கால அளவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பத்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு ஒவ்வொரு மாதமும் சுழற்சி அடிப்படையில் அகர வரிசையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்படும்.

2021 - 22 காலகட்டத்திற்கு நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறைப்படி இம்மாதத்திற்கு இந்தியா தலைமை. 

இதை ஒரு சங்கி எப்படி எழுதியுள்ளது என்றும் அதற்கு மற்ற சங்கிகள் எப்படி புளகாங்கிதம் அடைந்துள்ளது என்பதையும் பாருங்கள். 



மிகவும் கடுப்பாகி அங்கேயே ஒரு பின்னூட்டம் இட்டேன்.





இந்தியா இதற்கு முன்பாக ஏழு முறை இவ்வாறு இரண்டாண்டு கால நிரந்தரமில்லாத உறுப்பினராக

1950-1951,

1967-1968,

1972-1973

1977-1978,

1984-1985,

1991-1992,

2011-2012

இந்த காலகட்டம் எதிலும் பாஜக ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருந்த யாரும் இதனை தங்கள் சாதனையாக பீற்றிக் கொண்டதும் இல்லை.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கினார் என்ற பீற்றல் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சார்பாக ஐ.நாவில் வேலை பார்க்கும் வெளியுறவுத்துறை அதிகாரி (Indian Foreign Service Officer)  செய்ய வேண்டிய வேலை இது. வேறு எந்த நாட்டு பிரதமரும் இப்படியெல்லாம் கீழிறங்கிப் போனதில்லை.

அற்பருக்கு வாழ்வு வந்தால் 15 லட்ச ரூபாய் கோட்டும் போடுவார். இது போல அற்ப சந்தோஷமும் அடைவார்.

இதையெல்லாம் சாதனை என்று பரப்புகிற, நம்புகிற முட்டாள்கள்தான் மோடியை விட அதிகம் எரிச்சலூட்டுகிறார்கள். 

No comments:

Post a Comment