Tuesday, August 3, 2021

நாலு அம்புகள் அவர்கள் மீது பாயட்டும் தம்பி


 மேலே உள்ள தம்பியின் பெயர் பிரவீன் ஜாதவ். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் விற்போட்டியில் கலந்து கொண்ட வீரன், ஆம் ராணுவ வீரனும் கூட.

வெற்றி வாய்ப்பை மயிரிழையில் இழந்த இந்த தம்பிக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் நேரத்தில் மிரட்டல்களும் வருகிறது.

ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்ததும் தங்களின் குடிசையை செங்கல் வீடாக மாற்றி தகரக் கூரை போட்டிருந்தார்கள். இப்போது அந்த கூரையை கான்க்ரீட் கூரையாக மாற்றி வீட்டை கொஞ்சம் விரிவு படுத்த பார்த்தால் அக்கம்பக்கத்தார் மிரட்டத் தொடங்கி விட்டார்கள்.

இந்த கொடுமை நடப்பது பாஜக பெரும்பான்மை பெற்று அடிமை நிதீஷ் குமாரை ஆள அனுமதித்துள்ள பீகார் மாநிலத்தில்.

தாங்கள் வசதியாக இருந்தாலும் அடுத்தவர் கொஞ்சம் முன்னேறினாலும் அது பொறுக்காத வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் உலகில் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறார்கள்.

தம்பி பிரவீன் ஜாதவ், உன் வில்லில் இருந்து நாலு அம்புகள் அந்த பொறாமைக் காரர்கள் மீது பாயட்டும். இந்த இழி குணத்தாரை ஏறி மிதித்து விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment