Monday, August 12, 2019

அந்த கவிஞனின் வாக்கு . . .


நேற்று பெங்களூரில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் நான்காவது அகில இந்திய மகளிர் மாநாட்டில் உரையாற்றிய தலைவர் தோழர் அமானுல்லாகான் ஒரு கவிஞரின் வரிகளை மேற்கோள் காட்டினார்.

ஃபிரக் கோரக்பூரி என்ற புனைப்பெயரில் எழுதிய ரகுபதி சஹாய் என்ற இந்தி மற்றும் உருதுக் கவிஞர் எழுதிய அக்கவிதை 

கீழே உள்ளது.

"ஒரு சில நிமிடங்கள் 
நாம் செய்யும் தவறினால்
விளையும் கொடூரங்கள்
பல நூற்றாண்டுகள் கூட
தொடரும்"

2014 ம் ஆண்டில் நாம் செய்த தவறின் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் தோழர் அமானுல்லாகான்.

சில கவிஞர்களின் வாக்கு சத்திய வாக்கு! 

பிகு

ஃபிரக் கோரக்பூரி  வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் பற்றியும் தோழர் அமானுல்லாகான் கூறினார். அதெல்லாம் இந்த காலத்தில் நடக்க வாய்ப்பே இல்லை. அதை நாளை எழுதுகிறேன்.


No comments:

Post a Comment