Saturday, August 10, 2019

மோடி இப்போ பேசினதும் உடான்ஸ்தானா?


காஷ்மீரில் சினிமா ஷூட்டிங் நடத்தலாம். 

மக்கள் ஜாலியா ஸ்ரீநகரில் ஓடிப்பிடிச்சு விளையாடி ஜாலியா இருக்காங்க, அவ்வளவு அமைதியா இருக்கு காஷ்மீர்.

யார் வேணும்னாலும் நிலம் வாங்கலாம், தொழில் நடத்தலாம்.

என்றெல்லாம் மோடி சொன்னது வழக்கம் போல  உடான்ஸ்தானா?

ஆமாம்,

நிச்சயமாக உடான்ஸ்தான்.

அப்படி காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்றால் ஸ்ரீநகர் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் டி.ராஜாவையும்

ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே கைது செய்து அடைத்து வைத்து பிறகு திருப்பி அனுப்ப வேண்டும்?

மக்கள் அமைதியாக மோடி அரசின் முடிவை ஏற்று வரவேற்கும் காட்சிகளை காண வைத்திருக்கலாமே?

அவர்கள் மக்களை தூண்டி விடுவார்கள் என்ற அச்சம் உங்களுக்கு இருந்திருந்தால் எப்படி விமான நிலையத்தில் அடைத்து வைத்திருந்தீர்களோ அது போல ஒரு வாகனத்தில் அடைத்து வைத்து ஊர் சுற்றிக் காண்பித்திருக்கலாமே? அவர்களும் மத்தியரசின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்  என்பதை உணர்ந்து கொண்டிருப்பார்களே?

ஏன் இந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள்?

காரணம் ஒன்றுதான்.

உங்களின் அடக்குமுறையை,
மக்களின் கோபத்தை

தோழர்கள் யெச்சூரி, ராஜா மூலமாக 
உலகம் அறியக் கூடாது என்பதால்தானே!

ஆனால் இன்னும் உங்களை நம்புகிற இளிச்சவாயர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. 

1 comment:

  1. மோடி எப்போது பேசினாலும் பொய்தான்.
    மோடி என்ன பேசினாலும் பொய்தான்.

    ReplyDelete