Tuesday, August 27, 2019

ப்ளான் பண்ணி அழிக்கனும் . . . .



எல்லாவற்றையும் எப்படி 'ப்ளான்" பண்ணி அழிக்கனும் என்பதை மோடியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளாத ரகுராம்ராஜன் நீக்கப்பட்டு உர்ஜித் படேல் நியமனம்.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசு கஜானாவிற்கு மாற்ற ஒப்புக் கொள்ளாத உர்ஜித் படேல் நீக்கப்பட்டு பொருளாதாரம் படிக்காத சக்திகாந்ததாஸ் நியமனம்.

பொய்க்கணக்கு, வாய்க்கொழுப்பு குருமூர்த்தி இயக்குனராக நியமனம்.

ரிசர்வ் வங்கி மொட்டையடிக்கப்பட்டு 1,76,000 கோடி ரூபாய் மத்திய அரசு கஜானாவிற்கு மாறி விட்டது.

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இனி வேறென்ன வேண்டும் ?

கார்ப்பரேட்டுகளிடமிருந்து வர வேண்டிய வரி பாக்கி, கடன் பாக்கி, வட்டி பாக்கி எதையும் வசூலிக்க திராணியற்று இருக்கும் சொற்பத் தொகையையும் அவர்களுக்கே அள்ளிக் கொடுத்தால் இந்தியப் பொருளாதாரம் இனி வேகமாய் சாகும் . . .

ஆனாலும் கவனமாய் இருங்கள்.

வாய்க்கரிசி போடும் வேளையில் "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லாவிட்டால் குண்டாந்தடிகள் உங்கள் மண்டையைத் தாக்கும். 


No comments:

Post a Comment