Tuesday, August 13, 2019

ராகுல் ஒகே, அந்த ரெண்டு பேரு?



மிஸ்டர் காஷ்மீர் கவர்னர்,

நீங்க ஏதோ நல்லவர்னு நான் கொஞ்ச நாள் முன்னாடி இங்கேயே எழுதியிருக்கேன்.

"முட்டாள்தனமாக பேசும் ராகுல் காந்தி காஷ்மீர் வரட்டும், நிலைமையை நேரில் பார்க்கட்டும், அதற்காக தனி விமானம் அனுப்புகிறேன்"

என்று தெனாவெட்டாக சொல்கிறீர்களே,

காஷ்மீர் நிலைமையைப் பார்ப்பதற்காக தனி விமானத்தில் அல்ல, மற்ற பயணிகளோடு வந்தார்களே அந்த இருவர், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் டி.ராஜா,

ஆகிய இருவரை ஏன் கைது செய்து திருப்பி அனுப்பினீர்கள்?

அதிலும் தோழர் யெச்சூரி உங்களுக்கு முதல் நாளே கடிதம் அனுப்பினார்.

இப்போது ராகுல் காந்திக்கு தனி விமானம் அனுப்ப தயாராக உள்ள நீங்கள் தோழர் யெச்சூரியையும் தோழர் ராஜாவையும் காஷ்மீருக்குள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிப்பீரா?

அப்படி உங்களால் முடியாதென்றால் உங்கள் பேச்சுதான் ஆணவமானது, திமிர்த்தனமானது.

இவண்

பாஜகவின் அகராதிப்படி வரையறுக்கப்பட்டுள்ள
ஒரு தேச விரோதி

No comments:

Post a Comment