Wednesday, August 28, 2019

ஏன் வாய் திறப்பதில்லை தமிழிசை?


எதிர்க்கட்சித் தலைவர்கள் யாராவது தங்கள் கருத்துக்களைச் சொன்னால்,

சூர்யாவோ, விஜய் சேதுபதியோ ஏதாவது பிரச்சினை குறித்து தங்கள் கருத்தைச் சொன்னால்

வேக வேகமாக பாய்ந்து அவர்கள் மீது சீறுகிற 
தமிழிசை அம்மையாரே,

பெண்கள் குறித்து உங்கள் குரு பீடம் கொழுப்புமூர்த்தி சொன்ன கருத்துக்கு உங்களது எதிர்வினை என்ன?

அதென்ன பெண்களை இழிவுபடுத்தி உங்கள் கட்சி ஆட்கள் பேசும் போது மட்டும் மௌன விரதம் மேற்கொள்ள தொடங்கி விடுகிறீர்கள்?

பேசுங்கள் தமிழிசை அம்மையாரே,

குறைந்த பட்சம் குறிப்புக்கள் வைத்துக் கொண்டாவது பேசுங்கள்,

கொழுப்பு மூர்த்தி பேசுவது சரிதான் என்று ஏற்பதாகவே உங்கள் மௌனம் புரிந்து கொள்ளப்படும்.

அதுதான் உண்மை, பெண்களை இழிவுபடுத்தும் கட்சி பாஜக என்பதை தெரிந்து கொண்டுதானே அங்கே இருக்கிறேன், அதன் பின்பு இன்னும் ஏன் என்னை கேட்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா, 
சரி சரி 
கோடரிக்காம்புகள் புதிதா என்ன!

No comments:

Post a Comment