Wednesday, August 28, 2019

ஒரு சாக்கடை வாயரின் சதவீத கணக்கு! - -

மதுக்கூர் இராமலிங்கம்




துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரி யரும், ஆடிட்டரும், அதிகாரத் தரகருமான குருமூர்த்தி தனியார் மருத்துவமனை ஒன்றின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போது,  இந்தியப் பெண்களில்  30 சதவீதம் பேர்தான் பெண்மை உள்ளவர்கள்; பெண்ணிற்கும் பெண்மைக்கும் வித்தியாசம் இருக் கிறது. பெண்மை இல்லாத பெண்களும் இருக்கிறார்கள்; பெண்மை உள்ள பெண்கள்தான் தெய்வம். அவர்கள் தெய் வம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால், எல்லாப் பெண்களையும் தெய்வம் என்று சொல்லமாட்டேன் என்று விஷம் கக்கி இருக்கிறார்.  

இது குருமூர்த்தி என்ற தனி மனிதரின் வக்கிரக் குரல் அல்ல. அவர் முன்னிறுத்தும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குரலையே அவர் எதிரொலித்திருக்கிறார். பெண்களைப் பற்றி மிக இழிவான பார்வையை கொண்டிருப்பதுதான் இந்தக் கூட்டம். மநு சாஸ்திரம் 9.15 இப்படிக் கூறுகிறது, “ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல் பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தா லும் பெண்கள் துரோகிகளாகி விடு வார்கள்”.
பெண் வேத மந்திரங்களை ஓதக் கூடாது; ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில் பிராமணன் உண்ணக்கூடாது என்றெல்லாம் மநு சாஸ்திரத்தின் பல இடங்களில் பேசப்படுகிறது. இதைத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி சதவீத கணக்குப் போட்டு பேசியிருக்கிறார். சாணக்யன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரம், சூத்திர சாதிப் பெண்கள், உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு படைக்கப்பட்டவர்கள் என்கிறது.  மகாபாரதம் அனுஷானம் 28-ல், பெண்ணாகப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை; 
எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே; எவ்வளவு விலகினாலும் நெருப்பு திருப்தியடைவதில்லை; ஆறுகள்  கொண்டு வரும் எந்தளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை; அதேபோல, பெண்களின் பேராசையும் ஒருபோதும் தீருவதில்லை என்கிறது.  இந்த வேதங்களையும் சாஸ்திரங்களையும் வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படும் அளவுக்கு கரைத்துக் குடித்தவர்தான் குரு மூர்த்தி. அதனால்தான் இப்படிப் பேசுகிறார். இவர் மட்டுமல்ல, இவர் நம்புகிற சித்தாந்த வாதிகள் அத்தனை பேரும் அப்படித் தான். 
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்தி ரர், வேலைக்குப் போகிற பெண்கள் ஒழுக்க மற்றவர்கள் என்றார். துறவி என்று கூறிக் கொண்ட அவரது ஒழுக்கம் எப்படிப்பட் டது என்பதை உலகமே பார்த்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானவை. இந்துப் பெண்களுக்கு எதிரானவை. இதைப் புரிந்து கொண்டால் தான் இந்தியா தப்பிக்க முடியும்.  
சூரியனுக்கு கீழே உள்ள அனைத்து விசயங்கள் குறித்தும் கருத்துக் கூறும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், குருமூர்த்தி கருத்து குறித்து என்ன கருதுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டாமா? அவரால் முடியாது. ஏனென் றால், அந்த உரிமையை பாஜக அவ ருக்கு வழங்கவில்லை. 
குருமூர்த்தியின் நெற்றிப் பொட்டில் அடித்தது போல, பெண்மையின் இலக்கணத்தை நம் பாட்டுப் பாட்டன் பாரதி பாடுகிறான், “நிமிர்ந்த நன்னடை, நேற் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு”. குருமூர்த்தியைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது, ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. பேட்மிண்டன் உலக சாம்பியனாக சிந்து தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சிந்து!
காஷ்மீரை அடுத்து தமிழ்நாடு
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் முன்னிலையில், இந்து மிஷன் மருத்துவமனை விழா வில் பேசிய இந்து முன்னணி தலைவர் ஒருவர் காஷ்மீரில் ஆபரே சன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்து கில்ஜி, அடுத்து டாக்கா, அடுத்து லாகூர், அடுத்து நம்ம ஊர் தமிழ் நாடுதான். ஒரு மனிதனுக்கு நோய் ஏற் பட்டால் முதலில் தலையில் ஆபரேசன் செய்வோம். அதுதான் காஷ்மீரில் நடந் தது. சுகர் வந்துவிட்டால், அடுத்து காலில் ஆபரேசன் செய்ய வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் நாம் செய்ய வேண்டியது. இந்த ஆபரேசனை செய்து கொண்டிருக்கும் சர்ஜன்தான்  மோடி. மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர்தான் அமித்ஷா, இன்னும் பல டாக்டர்கள் ஊசி போடத் தேவைப்படுவார்கள். அந்த டாக்டர்கள் போல நாம் செயல்பட வேண்டும். அகண்ட இந்து ராஷ்டிரம் அமைப்பது தான் நம்முடைய நோக்கம். ராம கோபாலன்ஜி காலத்திலேயே அதை நிறை வேற்றி விட வேண்டும் என்று பேசியுள் ளார். இவர் அப்படி பேசியவுடன் கூட் டத்தில் இருந்தவர்கள், ஜெய் அகண்ட பாரதம் என்று கூச்சலிடுகின்றனர். 
காஷ்மீரைத் தொடர்ந்து இவர்கள் , 
ஒவ்வொரு மாநிலமாக சிதைப்பார்கள் என்ற அச்சம் உண்மையாகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அவர்கள் கண்ணில் விழுந்த தூசியைப் போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. எனவே, தமிழ் நாட்டையும் பல பகுதிகளாக சிதைத்து விட முயல்கிறார்கள். அவர்கள் 370-வது பிரிவை ரத்து செய்தது ஒரு துவக்கம் தான். இதை அந்த ஆசாமியே ஒப்புக் கொள்கிறார்.  உலக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு அகண்ட பாரதம் என்று எந்தெந்த நாட்டையோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு தமிழ் நாட்டையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த போலி டாக்டர்களிடமிருந்து இந்தி யாவையும் தமிழ்நாட்டையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இவர்கள் பேசுவதை வேடிக்கை என்று சிரித்துவிட்டு ஒதுங்கக் கூடாது. இப்படித்தான் தொடர்ந்து காஷ்மீரைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  தமிழ்நாட்டிலும் ஒரு மாநிலக் கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டதாக தேடிக் கொண்டிருப்பவர்கள் இத்தகைய பயங்கரவாதிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
நன்றி - தீக்கதிர் 26.08.2019

No comments:

Post a Comment