Sunday, March 31, 2019

காமெடி ஏன் ஜட்ஜய்யா?



பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர், பிஞ்சிலே பழுத்த பெண் பித்தர் ஒருவரைப் பற்றி எந்த ஊடகமும்  உண்மையை (அது அவதூறு என்று அவர்களின் அகராதியில் அர்த்தமாம்) சொல்லக் கூடாது என்று தடை உத்தரவு வாங்கி உள்ளார், (அதுவும் வேறு எந்த தரப்பின் கருத்தையும் கேட்காமல்).

அந்த தீர்ப்பில் அந்த ஜட்ஜய்யா மிகுந்த ஆதங்கத்துடன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

"இத்தனை நாள் இல்லாமல் தேஜஸ்வி சூர்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு அவர் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்புவது ஏன் என்பது கேள்விக்குரிய கேள்வி"

"நடுராத்திரியில நான் ஏண்டா சுடுகாடு போகனும்?" என்ற வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

ஒருவர் ஒரு பிரதான கட்சியின் வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்ட பின்புதான் அவரது யோக்கியதாம்சங்கள் பொது வெளியில் அலசப்படும்.

அவரை வேட்பாளர் என்று சொல்லி இருக்காவிட்டால் நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன என்றுதான் இருந்திருப்பார்கள்.

இது உங்களுக்கு புரியலையா ஜட்ஜய்யா?

ஆனால் அந்த "கேள்விக்குரிய கேள்வி' செம காமெடி.

ஆனால் அதெல்லாம் தீர்ப்பில் வேண்டாமே . . .


4 comments:

  1. //நடுராத்திரியில நான் ஏண்டா சுடுகாடு போகனும்// - நல்ல கேள்வி

    ReplyDelete
  2. http://puthiyamaadhavi.blogspot.com/2019/03/blog-post_31.html

    ReplyDelete
  3. அந்த ஜட்ஜய்யா படம் சூப்பரு

    ReplyDelete
  4. தடை போட்ட மட்டுமே சில நீதிபதிகளுக்கு தெரிந்திருக்கிறது

    ReplyDelete