Friday, March 22, 2019

தூங்குமூஞ்சியை துரத்தியடி


தூங்குமூஞ்சி காவக்காரரை துரத்தி அடிங்க



*யெச்சூரி சொன்ன குட்டிக்கதை*

_*(கோவையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சொன்னது)*_

*மோடி இப்போது தன்னை சௌக்கிதார் (காவலாளி) என்று சொல்லிக் கொள்கிறார். இவர் இதனை சொல்லுகிற போது எனக்கு தெலுங்கில் உள்ள கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு நிறுவனத்தின் முதலாளி ஒவ்வொரு நாளும் காலையில் தன்னுடைய நிறுவனத்திற்கு வரும்போது அவரின் சௌக்கிதார் (காவலாளி) இரவு கண்ட கனவு குறித்து முதலாளியிடம் சொல்லுவார். முதலாளியும் கதையை ரசித்து கேட்டு ரூ.200 அன்பளிப்பாக அளிப்பார். இதனால் தினமும் புதுப்புது கதைகளை சௌக்கிதாரும் சொல்லி வெகுமதியை பெற்று வந்தார்.

இதைப்போலவே ஒரு நாள் முதலாளி வந்தபோது நேற்று கண்ட கனவு குறித்த மிக நீண்ட கதையை  முதலாளியிடம் சொல்லி யுள்ளார். இதனை கடைசிவரை ரசித்துக் கேட்ட முதலாளி ஐயாயிரம் ரூபாயை சௌக்கிதாரிடம் கொடுத்து இன்றோடு உனக்கு இங்கு வேலை இல்லை; சென்று வா என்று சொல்லிவிட்டார்.*

*இதனை கேட்ட சௌக்கிதார் பேரதிர்ச்சியடைந்து வேலையை விட்டு அனுப்ப என்ன காரணம் என முதலாளியிடம் கேட்டார். அதற்குமுதலாளி உன்னை இந்நிறுவனத்தில் சௌக்கிதாராக நியமித்ததே கண் விழித்து இந்நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நீ தினமும் தூங்கிக்கொண்டு கனவு காண்கிறாய். இப்படி இருக்கும் உன்னிடம் இந்நிறுவனத்தை பாதுகாக்கும் சௌக்கிதார் வேலையை எப்படி கொடுப்பது? ஆகவே வேலை யை விட்டு நீக்குகிறேன் என்றார்.

இப்படித்தான் இந்நாட்டை பாதுகாப்பாய் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மோடி என்கிற சௌக்கிதாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இவர் உண்மையான பாதுகாவலனாக இல்லைஇப்போது மோடி ஊர் ஊராய் சுற்றுகிறார். புதுப்புது கதைகளை சொல்லி வருகிறார். கதை சொல்லுகிறார் என்றால்கனவு காணுகிறார். தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அர்த்தம். நாட்டை பாதுகாக்க விழிப்போடு இல்லாத மோடி என்கிற இந்த சௌக் கிதாரை இந்நாட்டின் முதலாளிகளான மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.*

_*தீக்கதிர் 21/3/2019*_

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதியில் கம்யூனிச பார்டி வென்றால் நான் மொட்டை அடிக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. மூஞ்சி காண்பிக்க துப்பில்லாம அனாமதேயமா வரவனுக்கு பேச்சைப் பாரு. வா, வந்து ஒரிஜினல் ஐ.டி யில சவால் விடு

      Delete
  3. DMK CANDIDATE IN ARAKKONAM JAGATHRAKSHAGAN HAS INVESTED 26000 CRORES IN A SRILANKAN REFINERY
    THE NEWSPAPER HINDU HAS PUBLISHED THIS NEWS. A CHOWKIDAR CANNOT CONTROL SO MANY THEIVES AT A TIME.

    ReplyDelete
    Replies
    1. அப்போ சௌக்கிதார் தூங்குமூஞ்சி, பதவிக்கு லாயக்கில்லாத வெத்து வேட்டுன்னு ஒத்துக்கிட்டீங்க.

      Delete
  4. Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete