Friday, March 22, 2019

எப்படி இருந்த அத்வானி????




1984 தேர்தலில் வெறும் இரண்டே இடம் பெற்றிருந்த பாஜக வை ரத்த யாத்திரை நடத்தி கலவரங்களை நாடெங்கும் தூண்டி அடுத்த தேர்தலிலேயே 85 இடங்களை பெற வைத்த கலவர நாயகன்,

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கக் கூடாது என்று மாணவர்களை தூண்டி விட்டு தீக்குள் தள்ள வைத்த

சுப்ரீம் கோர்டாவது ஹெச்.ராஜாவாவது என்று பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய திருப்பணிக்கு தலைமை தாங்கியவர்,

பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர் போன்ற அந்த கால வில்லன்கள் திரையில் நடத்திய வில்லத்தனத்தை நிஜத்திலேயே செய்து காட்டிய மனிதர்.

அவரது இன்றைய நிலையை உணர்த்துகிற இந்த புகைப்படத்தை பார்க்கையில் எனக்கே மிகவும் கஷ்டமாகி விட்டது.

புது தாதா தலையெடுத்த பின்பு பழைய தாதா ஒடுக்கப்படும் பரிதாபம் அத்வானிக்கும் நேர்ந்துள்ளது. 

பிரதமர் கனவில் ஒரு காலத்தில் இருந்தவருக்கு இப்போது எம்.பி சீட் கூட பறிபோயுள்ளது. 

படத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் போல நடக்காமல் இருந்தால் அது அவருடைய அதிர்ஷ்டம்

3 comments:

  1. தெய்வம் நின்று கொல்லும்.

    அது இப்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  2. தெய்வம் நின்று கொல்லும்.

    இப்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும பொருந்தும்.

    ReplyDelete
  3. தெய்வம் நின்று கொல்லும்.

    இப்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும பொருந்தும்.

    ReplyDelete