Wednesday, March 27, 2019

மானங்கெட்ட பாஜகவினர் தூக்கில் தொங்குவார்களா?




வாட்ஸப்பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் முடிவு செய்து விட்டார்கள். அவர்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள். இந்துக்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று தொடங்கி அப்பட்டமாக மத வெறியை கிளப்புகிற செய்தி அது.  இதனை தயாரித்ததும் பரப்புவதும் பாஜக வின் கீழ்த்தரமான உத்தி.

வெறுப்பரசியல் என்பதற்கு அந்த செய்தியைக் காட்டிலும் வேறு உதாரணம் தேவையில்லை.

ஒரு புறத்தில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நச்சைக் கக்கிக் கொண்டு இன்னொரு புறம் என்ன செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள புகைப்படங்கள் உணர்த்துகின்றன.






வாயைத் திறந்தாலே ஜிஹாதிகள் என்றும் பாவாடைகள் என்றும் கண்டபடி பேசிக் கொண்டு இப்போது ஓட்டுக்காக அவர்களிடமே போய் நிற்கிற பாஜகவினரை மானங்கெட்டவர்கள் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

ஒரு பக்கம் சிறுபான்மை மக்களை இழிவு படுத்திக் கொண்டு, அவர்களுக்கு எதிராக விஷப் பிரச்சாரம் செய்து கொண்டு அதே நேரம் வோட்டுக்காக அவர்கள் காலிலே விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட செய்தியை தயாரித்த, பரப்பிய பாஜக ஆட்கள் தங்கள் தலைவர்கள் செய்ததைப் பார்த்து ரோஷப்பட்டு தூக்கில் தொங்குவார்களா?

அதெப்படி செய்வார்கள்?

அவர்களும் மானங்கெட்ட பிறவிகள்தானே!!!!

1 comment:

  1. //வாயைத் திறந்தாலே ஜிஹாதிகள் என்றும் பாவாடைகள் என்றும் கண்டபடி பேசிக் கொண்டு இப்போது ஓட்டுக்காக அவர்களிடமே போய் நிற்கிற பாஜகவினரை மானங்கெட்டவர்கள் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?
    //
    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..

    இந்துக்களை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு அவர்களிடம் திமுக போகவில்லையா. லீலாவதி கொலை குற்றவாளிகளுடன் cpi கூட்டணி வைத்துக்கொள்ளவில்லையா?

    வெற்றி ஒன்றே குறிக்கோள். யாரிடமும் நேர்மை இல்லை!

    ReplyDelete