Thursday, March 14, 2019

எந்த எதிரி நாடு வக்கீல் சார்?



ரபேல் விவகாரத்தில் கோப்புக்கள் தொலைந்து போனது என்று முதலில் சொன்னார்கள்.

பிறகு தொலைந்து போகவில்லை, நகல் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.

நேற்று ரபேல் கோப்பின் நகல்கள் எதிரி நாடுகளிடம் உள்ளது என்று சொல்லியுள்ளார்கள்.

இதெல்லாம் மோடி தேர்தல் கூட்டத்தில் சொன்னதல்ல.

அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக சொல்வது.

எந்த எதிரி நாடு என்பதையும் அவர் சேர்த்தே சொல்லி இருக்கலாம். யார் நகல் எடுத்து அளித்தார்கள் என்பதையும் கூட சொல்லி இருக்கலாம்.

இப்படி பொத்தாம்பொதுவாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசலாம்.

ஆனால் நீதிமன்றத்தையே தேர்தல் மேடையாக ஒரு அரசு வழக்கறிஞர் மாற்றக் கூடாது என்பதை அவருக்கு சொல்லுங்களேன் நீதிபதிகளே

No comments:

Post a Comment