Friday, March 22, 2019

கொலையுண்டவர் குரல் கேளீர் . . .


ஒரு மேற்கு வங்கத் தோழரின் முக நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பாக இவர்களை எல்லாம் மறவாதீர்.

நான் ஷேக் நயீம் – கால்நடை வியாபாரி- வயது 35
நானும் எனது மூன்று நண்பர்களும் ஜார்கண்டில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டோம்.


நான் ஜெயேஷ் சோலங்கி – தலித் – வயது 21
ஆதிக்க சாதியினரின் திருவிழாவை வேடிக்கை பார்த்ததால் அடித்துக் கொல்லப்பட்டவன்



 நான் பெஹ்லு கான் - கால்நடை விவசாயி – வயது 55
மாடுகளை கடத்துவதாகச் சொல்லி மாட்டுக் குண்டர்களால் கொல்லப்பட்டவன்



நான் முகமது அக்லக் – விவசாயக் கூலி வயது 52
மாட்டிறைச்சி வைத்திருந்தேன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொல்லப் பட்டவன்.



நான் பிரதீப் ராதோட் – தலித் – விவசாயி- வயது 21
குதிரை வாங்கி ஓட்டியதற்காக கொல்லப்பட்டவன்



நான் முகமது அஃப்ரசுல் - புலம் பெயர் தொழிலாளி – வயது 48
லவ் ஜிஹாத் என்ற பெயரில் கொல்லப்பட்டவன்



பதிவு தொடரும் . . . .


No comments:

Post a Comment