Sunday, March 17, 2019

கடவுளை முட்டாளென்ற பாஜக மந்திரி



பாஜக மந்திரி பெரியாரை விட பெரிய நாத்திகனா?

அமைச்சர் பேச்சு - பக்தாள் கவனத்துக்கு

நான் தொகுதிக்கு எதுவும் செய்யலைன்னு கோபிச்சிக்காதீங்க என்பதுதான் அவரது அந்த உரையின் நோக்கம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தான் செயல்படாமல் இருந்ததை நியாயப்படுத்த கடவுளை இழுத்து ஒரு உண்மையை சொல்லி விட்டார்.

பாஜகவின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா. கௌதம புத்தா நகரின் மக்களாய் உறுப்பினராக இருக்கும் அவர் ஒரு கூட்டத்தில் பேசிய அவர்

“கடவுளாலேயே மக்களின் விருப்பங்களை தீர்த்து வைக்க முடியாத போது, ஒரு எம்.பி யால் மட்டும் எப்படி  அது முடியும்?

என்று கேட்டு விட்டு

“கடவுள் ஒரு மிகப் பெரிய முட்டாள். நம்மை உலகிற்கு அனுப்பிய கடவுள்தான், நம் உணவு, உடை, வீடு, வேலை வாய்ப்பு, நம் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்”

என்று மேலும் சொல்கிறார்.

என்ன புத்திசாலித்தனம்!

ஒரு அரசு செய்ய வேண்டிய பொறுப்புக்களை எல்லாம் செய்யாமல் தட்டிக் கழித்து ஏமாற்றி விட்டு

“கடவுளாலேயே முடியலை, நாங்க மட்டும் எப்படி?”

என்று அழகாக திசை திருப்புகிறார்.  அதற்காக கடவுளையும் மிகப் பெரிய முட்டாளாக்கி விட்டார்.

பக்தர்களே கவனியுங்கள். எப்போதுமே கடவுளை இழிவுபடுத்துபவர்கள் நாத்தீகர்கள்  அல்ல, பக்தர்கள் வேடம் போடுபவர்கள்தான்.

தந்தை பெரியாராவது கடவுளை கண்டுபிடித்தவர்களையும் நம்புபவர்களையும் பரப்புபவர்களையும்தான் கடுமையாக விமர்சித்தார். ஆனால் இந்த பாஜக அமைச்சரோ ?????????

3 comments:

  1. அவங்க ஃபிராடு பசங்க என்பதை அவங்களே ப்ரூவ் செஞ்சிகிட்டு இருக்கானுங்க

    ReplyDelete
  2. கடவுளை முட்டாள் என்டு சொன்னால் உங்களுக்கு ஏன் வருத்தம் தோழர்?

    ReplyDelete
  3. அடப்பாவமே! தோழர் வருத்தப்படுவது அவர் கடவுளை முட்டாள் என்று சொன்னதற்காக அல்ல, அப்படி சொல்வதன் மூலம் மக்களை முட்டாளாக்க முயல்வதற்காக...

    ReplyDelete