Friday, March 29, 2019

நள்ளிரவுக் கொலை புதிதல்ல . . .


கோவாவில் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் வந்த போது பெரும்பான்மைக் கட்சியாக காங்கிரஸ் வந்தது. பாஜகவிற்கு அதை விட எண்ணிக்கை குறைவு.

 உதிரி கட்சிகள், சுயேட்சைகளை விலைக்கு வாங்கி ஆளுனரின் உதவியோடு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிகரை கோவாவிற்கு மீண்டும் வரவழைத்து அங்கே ஆட்சிக்கு வந்தது பாஜக.

மனோகர் பாரிகர் இறந்து போன அன்றே புதிய முதல்வராக பிரமோத் சவந்த் என்பவரை பதவியேற்க வைக்கிறார்கள். தலா மூன்று எம்.எல்.ஏ க்கள் வைத்துள்ள இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி தருகிறார்கள்.

அதில் ஒருவர் எம்.ஜி.பி கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ண டாவலிகர் என்பவர். அவரது சகோதரர்தான் அந்த கட்சியின் தலைவர். ஒரு இடைத் தேர்தலில் நிற்க சீட் கேட்கிறார். ஏற்கனவே பெரும்பான்மை இல்லாத பாஜக கடுப்பாகி விட்டது. 

உன்னுடைய ஆதரவோடு ஒன்றும் எங்களுக்கு ஆட்சி அவசியமில்லை என்று கோபமாக கூறி விட்டது.

புதிய முதலமைச்சர் ராஜினாமா செய்து விடுவார் என்று எதிர்பார்த்தீர்களா என்ன?

அவ்வளவு சொரணையெல்லாம் பாஜகவிற்கு இருக்கிறதா என்ன?

மூன்று எம்.எல்.ஏ க்கள் கொண்ட எம்.ஜி.பி கட்சியில் டாவாலிகர் தவிர மீதமுள்ள இரண்டு எம்.எல்.ஏ க்களை பாஜகவிற்கு கட்சி மாற வைத்து விட்டது. மூன்று பேரில் இரண்டு பேர் குரங்கு போல தாவினால் கட்சித்தாவல் தடைச்சட்டம் எல்லாம் செல்லாது.

டாவாலிகரின் துணை முதல்வர், அமைச்சர் பதவி எல்லாம் பறிக்கப்பட்டு விட்டது.

பாஜகவிற்கு வந்து சேர்ந்த இரண்டு பேரும் மந்திரியாகி விட்டார்கள். அதிலே மனோகர் அஸ்கானோகர் என்பவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுத்து விட்டார்கள்.

இந்த குரங்கு தாவலை பலரும் கோவா நள்ளிரவுக் கொள்ளை என்று அழைக்கிறார்கள்.

ஜனநாயகத்தை,
கூட்டணி தர்மத்தை,
நம்பிக்கையை

கொலை செய்த நிகழ்வு இது.

அதனால் 

கோவா நள்ளிரவுக் கொலை என்பதுதான் 
பொருத்தமான தலைப்பாக இருக்க வேண்டும்.

அதே போல பாஜகவிற்கும் இது போன்ற 
நள்ளிரவுக் கொலைகள் ஒன்றும் புதிதல்ல . . .


2 comments:

  1. ஒரு தகவல்

    சாராய எழுத்தாளர் சாரு நிவேதிதா நம் தளபதியை வசை பாடி ஒரு பதிவு போட்ட்ருக்கான்
    படிச்சீங்களா

    ReplyDelete
  2. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

    ReplyDelete