Tuesday, March 19, 2019

மொட்டை சாமியார் போலீஸ் அவ்வளவு மொக்கையா?


மொட்டைச் சாமியார் உபி முதல்வரான பின்பு அங்கே நூற்றுக் கணக்கான போலி எண்கவுன்டர்கள் நடந்து எண்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

"நடந்ததெல்லாம் போலி எண்கவுன்டர்கள் அல்ல,  போலீஸ் எப்போது சுடப்படுகிறார்களோ, அப்போதுதான் அவர்களும் துப்பாக்கியால் திருப்பிச் சுடுகிறார்கள்" என்று திருவாய் மலர்ந்துள்ளார் மொட்டைச் சாமியார்.

மக்கள் தங்களை சுடப் போகின்றார்கள் என்பது கூட தெரியாத அளவுக்கு மொக்கையானவர்களா உ.பி போலீஸ்காரர்கள்?

எண்பது பேர் அளவிற்கு காவல்துறை சுட்டதால் இறந்து போயுள்ளார்கள். சுட்டதற்கு திரும்பி சுட்டதால் மக்கள் இறந்து போயுள்ளார்கள் என்பதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம். 

அப்படி மக்கள் முதலில் சுட்டதால் எத்தனை போலீஸ்காரர்கள் இறந்து போனார்கள்?

எந்த ஒரு போலீஸிற்கும் ஒரு சின்ன பிளேடு காயம் கூட இல்லையே, அது எப்படி?

அயோக்கியத்தனமும் அராஜகமும் செய்தாலும் அதெல்லாம் ஒன்றுமே கிடையாது என்று உத்தம புத்திரனாக வேஷம் கட்டுவதெல்லாம் வெட்கம் கெட்ட பாஜக ஆட்களுக்கு மட்டுமே சாத்தியம்


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete