Tuesday, July 26, 2016

வைரமுத்து வயிற்றெச்சலின் பின்னணி



கபாலி படம் தோல்வி என்று வைரமுத்து இரு முறை அழுத்திச் சொன்ன வீடியோவை நானும் பார்த்தேன். இரு முறை பார்த்தேன்.

முதல் முறை பார்த்த போது ஏதோ அவருக்கும் தாணுவிற்குமான பங்காளிப் பிரச்சினை என்றுதான் நினைத்தேன். 

இரண்டாவது முறை பார்த்த போதுதான் அவரின் கோபத்திற்கான காரணம் புரிந்தது.

நீங்க எல்லாம் போட்டிருக்கிற கோட்டை கழட்டித்தான் ரஞ்சித் ரஜனிகாந்துக்கு கொடுத்திருக்கார் என்று ரொம்பவுமே நக்கலாக சொல்கிறார்.

ரஜனிகாந்த் என்ன இதற்கு முன்பு கோட் அணிந்து நடித்ததில்லையா என்று யோசித்தால் தீ, பில்லா, பாட்சா, படையப்பா, ராஜாதிராஜா, அண்ணாமலை, அருணாச்சலம் என்று பல படங்கள் நினைவுக்கு வந்தது. ஏன் ரஜனிகாந்தின் முதல் படத்திலே கூட கோட்டில்தான் வருவார்.

பிறகு ஏன்?


கபாலியை ஆதரிப்பவர்கள் சொல்லும் ஒரு காரணம்.

காந்தி அரை வேட்டி அணிந்ததும் டாக்டர் அம்பேத்கர் கோட் அணிந்ததிலும் அரசியல் உண்டு என்ற வசனம்.

அதுதான் வைரமுத்துவுக்கு உறுத்துகிறது. அதை வாந்தியும் எடுத்து விட்டார். அவருக்குள் ஒளிந்திருந்த ஆதிக்க அரசியல் அம்பலமாகி விட்டது. 

அடுத்த படத்துக்கு டைட்டில் சாங் கொடுத்தால் மாற்றிப் பேசிடுவார் என்பது வேறு விஷயம்.

ரஜனிகாந்த் கோட் அணிந்த படங்கள் கோட் அணிந்த வைரமுத்துவுக்கு சமர்ப்பணம்



7 comments:

  1. Vairamuthubis a good poet, but he is also an opportunist and head-weighted person. Forget him.

    Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***

    Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

    After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

    Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

    Watch more Kabali!

    By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged M Karunanithi and MGR in politics (but they failed to bring those changes). Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

    ReplyDelete
  2. வைரமுத்துவுக்கு இது தேவையே இல்லாத வேலை. எதையோ சொல்ல வந்து தான் உளறிவிட்டதாக அவரே சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

    நிகழ்வு ஒண்ணு...

    வைரமுத்து கபாலி தோல்வினு உளறல்

    நிகழ்வு ரெண்டு,,

    தயாரிப்பாளர் தாணு வந்து வைரமுத்துக்கு நான் 4000 (??) கபாலி டிக்கட் கொடுத்தேன், ஒரு நயாப் பைசாகூட வாங்கவில்லை. அவருக்கு சாண்ஸ் கொடுக்கவில்லைனு இப்படி பேசுகிறார்னு சொல்லி மானத்தை வாங்க.

    கடைசியா வைரமுத்து அதை இப்படி சமாளிக்கிறார்..

    நடிகர் ரஜினிகாந்தின் ‘கபாலி’படம் வெளிவந்து நான்கு நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், புத்தக விழா ஒன்றில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ‘’கபாலி படம் தோல்வி’’ என்று கூறியதுபோல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், ‘’நான் புரிந்துகொள்கிறேன் ஒவ்வொருவரையும். இந்த கூட்டத்தை, வந்திருக்கிற பெருக்களை, அரசியலை, விஞ்சானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, குழந்தையை, தொலைந்துபோன விமானத்தை, ’கபாலியின் தோல்வி’யை எல்லாம் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது’’ என்று வைரமுத்து பேசியுள்ளார்.

    கபாலி படத்தை வெற்றிபெற வைத்த அனைவருக்கு நன்றி என்று ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், கபாலி தோல்வி என்று வைரமுத்துவின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    வழக்கமாக ரஜினி படங்களுக்கு பாட்டு எழுதும் வைரமுத்து, ‘கபாலி’ படத்திற்கு ஒரு பாட்டுகூட எழுதவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்தான் வைரமுத்து இப்படி பேசியுள்ளார் என்று பலரும் பேசினர்.

    இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் இது குறித்து, ‘’கபாலி படம் வெற்றி, தோல்வி என்பதை ஏற்கவில்லை; புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். வெற்றி, தோல்வி என சொல்லநினைத்து ஒருவார்த்தை விடுபட்டதை பிறகு உணர்ந்தேன். இந்த பேச்சும், அது தொடர்பான சர்ச்சை குறித்தும் ரஜினியிடம் விளக்கம் அளித்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

    இதெல்லாம் தேவையா இவருக்கு? :(

    ReplyDelete
  3. அவர் மனதில் இருந்த ஜாதி வெறி வெளிப்பட்டு விட்டது. அவ்வளவுதான். தினமணியும் வைரமுத்துவும் வேறல்ல. ஒன்றுதான்

    ReplyDelete
  4. அவருதான் வருத்தம் தெரிவித்து விட்டாரே, அதற்குப் பிறகும் ஏன் இந்த பதிவு? தயவு செய்து அகற்றி விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வைரமுத்து பேசியது இணைய வெளியில் இன்னும் உலாவிக் கொண்டு இருக்கிறதே அனானி. அவையெல்லாம் அகற்றப்படட்டும். பிறகு நான் யோசிக்கிறேன்

      Delete
    2. மேலும் எனது கண்டனம் அவர் கோட் அணிவது பற்றி சொல்லி தனது ஜாதி ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தியதற்கு. அதற்கு ஒன்றும் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே இப்பதிவை நீக்க முடியாது

      Delete
  5. எனவே இப்பதிவை நீக்க முடியாது....Super....

    ReplyDelete