Thursday, December 7, 2017

மேனகா அம்மையாரை மனதில் தொழுதபடி


நேற்று இரவு ஒன்பது மணிக்கு ஒரு முக்கியமான வேலையாக வெளியே போக வேண்டியிருந்தது. 

வீட்டை விட்டு வெளியே வந்தால் பேரணி போல ஒரு ஆறு நாய்கள் நடை போட்டுக் கொண்டிருந்தன. பிறகு வீட்டு வாசலிலேயே அமர்ந்து விட்டன. மேனகா அம்மையாரை மனதில் தொழுதபடி புறப்பட்டேன்.

திரும்பி வருகையில் வேலூர் மாவட்ட ஆட்சியரகம், எஸ்.பி அலுவலகம் இரண்டுக்கும் நடுவில் உள்ள சாலையில் ஒரு ஐந்து நாய்கள் சாலை மறியல் செய்வது போல வழியை மறித்து படுத்துக் கிடந்தன. ஹாரன் ஓசைக்கு எல்லாம் அவை அசையவே இல்லை. வாகனங்களில் செல்பவர்கள்தான் ஒரு ஓரமாக ஒதுங்கி போக வேண்டியிருந்தது.

வழியில் வேளாளர் தெரு என்று ஒரு தெரு. அங்கே மூன்று, நான்கு என்று கூட்டணி போட்ட நாய்க் கூட்டம் ஒரு மூன்று. சுயேட்சையாக திரிந்தவர்கள் ஒரு அறுவர் என்று தெருவில்  இருந்த மனிதர்களை விட நாய்களின் எண்ணிக்கை அதிகம்.

பதினோரு மணிக்கு தூங்குவதற்காக விளக்கை அணைத்தால் அப்போது ஒரு நாய் ஓலமிட ஆரம்பிக்க, அந்த இசைக்கச்சேரியில் இதரர்களும் இணைந்து கொள்ள நம் தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

வேலூர் மாநகராட்சி எதுவும் செய்யப் போவதில்லை. முன்பு இருந்த கமிஷனர் லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாக பிடிபட்டு கைதானதால் புதிதாக இன்னொருவர் வந்தார். இரண்டு மாதத்திற்குள்ளாக அவரும் லஞ்சம் வாங்கி பிடிபட்டு சிறைக்கு போய்விட்டார்.

என்றுதான் தீருமோ வேலூரின் நாய்த்தொல்லை? 

பின் குறிப்பு:  இணைய தள இணைப்பிற்கு என்ன அச்சமோ தெரியவில்லை! நான் கொஞ்சம் பயத்தோடு தூரத்தில் இருந்தபடி எடுத்த புகைப்படங்களை இந்த பதிவில் போட மறுக்கிறது!!!

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. தெரு நாய்களைப் பற்றி பேசினால் சொறி நாய்களுக்கு கோபம் வருவது இயல்புதான்

    ReplyDelete