Thursday, December 21, 2017

ரா.கா சினிமாக்கு போனா குற்றமா?





முன் குறிப்பு : ராகுல் காந்தி மீது என்றுமே எனக்கு பெரிய அபிப்ராயம் இருந்தது கிடையாது.  இப்போதும் அந்த நிலையில் மாற்றம் கிடையாது.  மோடி எப்படி பிரதமருக்கு லாயக்கில்லாதவரோ, எப்படி அவர் பெரு முதலாளிகளின் எடுபிடியோ அது போலத்தான் ராகுல் காந்தியும் என்பதுதான் யதார்த்தம்.

சரி இப்போது பதிவிற்கு வருகிறேன்.

குஜராத், ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மோடி கடமை உணர்வோடு ஓஹி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடப் போய் விட்டார். ஆனால் ராகுல் காந்தியோ தன் நண்பர்களுடன் சினிமா பார்க்க போய் விட்டார்.

இப்படி ஒரு செய்தியோடு “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி ஒரு சீரியஸ் விவாதம் நடத்தி உள்ளது.

முதலில் அண்ணன் மோடியின் பொறுப்புணர்வைப் பார்ப்போம்.

நமக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ அவர்தான் பிரதமர். பிரதமர் பதவிக்கு என்று சில கடமைகள் உள்ளது, நாடாளுமன்றத்திற்கு போவது, பேரிடர் நடந்த இடத்தினை பார்வையிட்டு நிவாரணத்திற்கு நிதி வழங்குவது என்று ஏராளமாக உள்ளது.

“செத்ததுக்கு வா என்றால் கருமாதிக்கு வந்திருக்கியே”

என்பது போல மிகப்பெரிய  பேரிடர் நிகழ்ந்து வெகு நாட்களுக்குப் பிறகு நிதானமாக வந்தார் மோடி. அதிலும் பாதிப்பை வெறும் புகைப்படங்களில் பார்த்தார். இதைத்தான் பொறுப்பு என்று சொல்கிறது “டைம்ஸ் நவ்”.

நாடாளுமன்றம் செல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம். அவ்வளவுதான். வெளிநாட்டுப் பயணம் இல்லாததால் கன்னியாகுமரி வந்து விட்டார்.

இதை பொறுப்புணர்ச்சி என்று புளகாங்கிதம் அடைவதெல்லாம் “சின்ன புள்ளதனம்” ஆக அல்லவா இருக்கிறது!

சரி, ராகுல் காந்தி சினிமாவிற்குப் போனது என்பது என்ன பெரிய குற்றமா இல்லை தேசத்துரோகச் செயலா? தேர்தல் முடிவிற்குப் பிறகு ஒன்றும் அவர் ஒளிந்து கொள்ளவில்லையே! மாறாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தாரே! மோடி செல்வதற்கு பல நாட்கள் முன்பே ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராகுல் காந்தி வந்து போனார் என்பதுதான் உண்மை.

தனிப்பட்ட விருப்பத்திற்கென்று நேரம் ஒதுக்கக் கூடாதா என்ன? நாட்டிற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று மோடி போல வெட்டி சீன் போட வேண்டுமா என்ன?

மோடிக்கு ஜால்ரா அடிப்பதற்காக எந்த  அளவிற்கும் ஊடகங்கள் கீழிறங்கும் என்பதற்கு டைம்ஸ் நவ்வின் செயல் ஒரு எடுத்துக்காட்டு.

12 comments:

  1. நான் நினைத்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பேஸிக்கலி, நீ ஒரு பிச்சைக்கார பரதேசி.
      ஓசிச் சோற்றில் உடல் வளர்ப்பவன்.
      வெளிநாட்டில் இருப்பதாக ஏண்டா இந்த வெட்டி பந்தா?

      Delete