Thursday, December 26, 2013

சிரிப்பு வரவில்லை எஸ்.வி.சேகர்

வாகனத்தின் பழுதை சரிபார்க்க மெக்கானிக் கடையில் உட்கார்ந்திருந்த
போது  ஒரு தொலைக்காட்சி விவாதத்தை பார்க்க நேர்ந்தது. 

எஸ்.வி.சேகர் மிகவும் ஆக்ரோஷமாக நரேந்திர மோடிக்கு ஆதரவாக
பேசிக் கொண்டிருந்தார். வழக்கமாக எல்லா பாஜககாரர்கள் போலவும்
குஜராத் கலவரத்தை நியாயப்படுத்த கோத்ரா சம்பவத்தை அவரும்
குறை கூறினார். 

ஆனால் அதற்குப் பிறகு அவர் கூறியதுதான் அராஜகம்.

கோத்ரா சம்பவத்திற்கு பிறகு ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும்
இடையே கலவரம், மோதல் நடந்தது. அதில் ஹிந்துக்களும் கூட
கொல்லப்பட்டார்கள் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல்
சொல்கிறார். எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்று
அவரால் விபரம் அளிக்க முடியுமா? தேடி தேடி இஸ்லாமியர்களை
வேட்டையாடி விட்டு இரு தரப்பும் மோதிக் கொண்டார்கள் என்று
கூச்ச நாச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.

முஸ்லீம்கள் இன்னும் நிவாரண முகாம்களில் இருப்பதற்கு
அங்கேதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்ற வியாக்யானம் வேறு.

அதே போலத்தான் அந்த இஞ்சினியர் பெண்ணை வேவு பார்த்ததை
நியாயப்படுத்திப் பேசினார்.

சினிமா மற்றும் நாடகங்களில் எஸ்.வி.சேகர் பேசினால் சிரிப்பு
வரும். ஆனால் இன்று எரிச்சல் மட்டுமே வந்தது.

இவரை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தயவு செய்து 
அனுப்புங்கள். விழும் கொஞ்ச நஞ்ச வோட்டையும் கூட
இவரது அடாவடி பேச்சு குறைத்து விடும்.
 

5 comments:

  1. இதை படிச்சு தெளிவு பெறுங்க... http://srseghar.blogspot.in/2013/02/1.html

    ReplyDelete
  2. விக்கிபீடியாவிலும் அப்படி தகவல் இருக்கிறது.
    (According to the official figures, the riots resulted in the deaths of 790 Muslims and 254 Hindus...)

    ReplyDelete
  3. Athu comedy pechupa....

    ReplyDelete
  4. மத்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது..

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/4536199.stm

    இஞ்சினியர் பெண்ணை வேவு பார்த்தது, அரசு எந்திரத்தை தனிப்பட்ட விஷயத்திற்கு உபயோகப்படுத்தினார்கள் என்ற வகையில் தவறு. வேவு என்ற வகையில் அது தானே கேட்டுக்கொண்டது என அந்த பெண்ணின் தந்தை விளக்கமளித்தார். அது தனக்கு தெரிந்தே நடந்தது என அந்த பெண்ணும் சொன்னார் என நினைக்கிறேன்.

    நிவாரண முகாம்கள் பற்றி தெரியவில்லை. அது தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று சொன்னால், குஜராத் முஸ்லிம்களுக்கு இன்னும் பாதுகாப்பானதாக இல்லை என அர்த்தம் ஆகிறது. ஸெல்ப் கோல் போட்டுவிட்டாரோ?

    ReplyDelete
  5. பாஜக இவரை நாடு முழுவதும் அனுப்ப வேண்டும் என்பதே என் ஆசை ! கூட இருந்தே குழி பறிக்கும் வேலையை இவர் ஒருவரே பார்த்து விடுவார் ! ஜாடிகேத்த மூடி ! இல்லையில்லை மோடிக்கேத்த ஜோடி !

    ReplyDelete