Thursday, December 12, 2013

தமிழக மானம் காத்த அதிமுக எம்.பிக்கள்

கோப்ரா போஸ்ட் புலனாய்வு பத்திரிக்கை வைத்த பொறியில் 
பதினோரு எலிகள், மன்னிக்கவும் எம்.பிக்கள் சிக்கிக் கொண்டு
உள்ளார்கள். 

இல்லாத ஆஸ்திரேலிய எண்ணெய் நிறுவனத்திற்கு வட கிழக்கு
மாநிலங்களில் ஒப்பந்தம் வழங்க சிபாரிசுக் கடிதம் அளிப்பதற்கு
லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்.

வழக்கமாக இது போன்ற விவகாரங்களில் காங்கிரஸ், பாஜக,
சமஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்கள்தான் மாட்டுவார்கள்.
இதுவரை தமிழக எம்.பிக்கள் யாரும் சிக்கியதில்லை.

முதல் முறையாக பொள்ளாச்சி எம்.பி சுகுமாரும் தென் சென்னை
எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரனும் மாட்டியுள்ளார்கள். தமிழகத்திற்கு
இருந்த கறை வெற்றிகரமாக நீங்கி விட்டது.

பொதுவாக அதிமுக ஆட்கள் மூச்சு விட வேண்டுமென்றால் கூட
அம்மாவின் அனுமதி இல்லாமல் மூச்சு விட மாட்டார்கள்.

இந்த பிரச்சினையில் எப்படி?

அம்மாவிற்கு தெரிந்தா? தெரியாமலா?
 

3 comments:

  1. அமெளண்ட் ரொம்ப கம்மியா இருக்கே, இவிங்க அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டாங்க

    ReplyDelete
  2. Amma is totally against corruption, and ammavirku theriyamal mattume ithu nadanthullathu.Yes sir Karl Marx & Lenin mel sathiyamaha solluhiren , CPIM in Koottani katchi thalaivi Amma is always against corruption. Differentiating AIADMK MP and Amma is a clear villa thanam,Please try to persuade Amma to remove these 2 MPS from the party.

    ReplyDelete
  3. kkk - நான் எழுதியதில் உள்ள நக்கலைப் புரிந்து கொள்ள முடியாத வெள்ளந்தியாக இருக்கீங்களே! இதெல்லாம் திமுகவிற்கு சரிப்பட்டு வருமா?

    ReplyDelete