Monday, December 16, 2013

பால் முந்திரி தேங்காய் கேக் - அல்வாக மாறிய சொதப்பல் கதை



ஒரு சோக காவியத்தை சிரித்துக் கொண்டே படியுங்கள்



பிடிக்கப் போய்


ஆக மாறியது என்று சொல்வார்களே அது போன்றதொரு ஒரு
சோகக் கதை இது.



இது போல செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு
ஊர வைத்த முந்திரி, தேங்காய், சர்க்கரை சேர்க்காத பால் கோவா
எல்லாவற்றையும் நன்றாக அரைத்து சர்க்கரை சேர்த்து கிளறி நெய் விட்டு கிளறி தட்டில் கொட்டி விட்டு வில்லை போடப் பார்த்தால்
 

 வருவேனா என்று  அடம் பிடித்தது.
மீண்டும் சர்க்கரைப் பாகு வைத்து கிளறி
தட்டில் கொட்டி விட்டு 



முயற்சித்தாலும் அதே கதைதான்.

பிரிட்ஜில் வைத்து பிறகு முயற்சி செய்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. உருண்டையாக பிடிக்கலாம் என்று யோசித்து அப்படியே செய்து அரை மணி நேரம் கழித்து பார்த்தால் எல்லா உருண்டைகளும் ஒன்றாக கலந்து கண் சிமிட்டுகிறது.

பிறகு வேறு வழியே இல்லாமல் கப்பில் போட்டு அல்வாவாக சாப்பிடக் கொடுத்தாகி விட்டது.




ருசி எப்படி இருந்தால் என்ன? எதிர்பார்த்த வடிவில் வராதது சொதப்பல்தான். சொதப்பல் மட்டுமே.

ஆனாலும் விக்ரமாதித்தன் சளைக்க மாட்டான். முயற்சிகள் தொடரும். பதிவுகளும் கூட.

3 comments:

  1. வாழ்த்துக்கள் இந்தளவாது முயற்சி செய்தமை கண்டு
    பெருமையடைகிறோம் :))) தொடர்ந்தும் முயற்சியுங்கள்
    வெற்றி நிட்சயம் .

    ReplyDelete
  2. அண்ணே! அல்வா கிண்ட கத்துக்கிட்டீங்க! இனி யாருக்காவது கொடுக்கனும்ல. யாருன்னு முடிவு பண்ணிட்டேளா!?

    ReplyDelete
  3. சொதப்பினா அத நீங்கதானே சாப்பிட்டு இருக்கணும் ? அதுக்காக வீட்டில இருக்கிறவங்கள சோதனை எலி ஆக்கிட்டிங்களே ! இது நியாயமா தோழரே ?

    ReplyDelete