Friday, December 13, 2013

மதுரைக்காரங்க குறும்புக்கு அளவே கிடையாதா?



கடந்த சனிக்கிழமையன்று மதுரை முழுவதும் கீழே உள்ள சுவரொட்டிகள் மின்னிக் கொண்டிருந்தது. 3 டி படங்களோடு வெளிவருவதால் அது ஏதோ ஆனந்த விகடனின் விளம்பரம் என்று அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை.

அன்றி இரவு பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு தோழர் ரொம்பவும் உற்சாகமாக சிரித்துக் கொண்டே வந்தார். என்னவென்று காரணம் கேட்டால்  இந்த சுவரொட்டியை படிக்கச் சொன்னார்.




தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு,  ஜெயந்தி நடராஜ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகிய ஆறு பேருக்கும் கோட் சூட் மாட்டி விட்டு 3 டி கண்ணாடியும் போட்டு விட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஒற்றுமையாய் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்று மதுரை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அச்சடித்திருந்த போஸ்டர் அது.

அத்தனை பேருக்கும் கோட் சூட், கண்ணாடி போட்டு விட்ட நகைச்சுவை உணர்வை பாராட்ட வேண்டும். அதே போல காங்கிரஸ்காரர்கள் மக்களது  உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது கூட நல்ல நகைச்சுவைதான்.

இதிலே சிதம்பரம் முகத்தை மட்டும் மறைத்து துண்டு நோட்டீஸ் ஒட்டி விட்டார் ஒருவர். அவ்வளவு தீவிர விசுவாசி போல!

2 comments:

  1. தீவிர விசுவாசியின் போஸ்டரில்...அடிச்சுக்கிறது எங்க Permanent jobஎன்று சிம்பாலிக்காய் காட்டி இருப்பதையும் பார்த்து நகைத்தேன் !

    ReplyDelete
  2. தீவிர விசுவாசியின் போஸ்டரில்...அடிச்சுக்கிறது எங்க Permanent jobஎன்று சிம்பாலிக்காய் காட்டி இருப்பதையும் பார்த்து நகைத்தேன் !

    ReplyDelete