Saturday, December 14, 2013

தமிழருவி மணியன் ஐயா தரகு வேலை அமோகமா தொடங்கிடுச்சு போல

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று அமைக்கிறேன் என்று புறப்பட்டுள்ள
புதிய தரகுப்புயல் தமிழருவி மணியனின் முதல் போணியாக
அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற லெட்டர்பேட்
கட்சி ஒன்றை பாஜக விற்கு ஆதரவாக கடிதம் கொடுக்க வைத்து
டி.வி, பேப்பருக்கெல்லாம் சூப்பரா போஸ் கொடுத்துட்டாரு.

காந்திய மக்கள் இயக்கம் காந்தியை கொலை செய்தவர்களை
அரியணையில் அமர வைப்பது என்ற லட்சியத்தோடு துடிப்பாக
துண்டை கையில் போட்டு பேரம் நடத்தி வருகிறது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டே
திராவிடக் கட்சிகள் போல லெட்டர்பேட் கட்சி குட்டி முதலாளிகளோடு
போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் என்ன எழவு மாற்றை
தரகுப்புயல் கொண்டு வரப் போகிறாரோ?

பொன்னார்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்க பதவிக்கு
தரகுப் புயல் எப்ப வேணும்னாலும் வேட்டு வைக்கலாம்.

5 comments:

  1. தோழர் கண்ணியமாக எழுதுபவர் என்று நம்பியவர்களுக்கு பெரிய அதிர்ச்சி.அய்ந்து மானில தேர்தல் முடிவுகள் அவரை கரை வேட்டி அரசியல்வாதி லெவலுக்கு கொண்டுபோய்விட்டது.

    ReplyDelete
  2. விஜயன் சார், நான் எழுதியதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். இதில் எங்கே கண்ணியக் குறைவு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. பாஜகவையும் ஒரு முஸ்லீம் கட்சி ஆதரிக்கிறது என்ற மோசடித் தோற்றத்தை உருவாக்க தமிழருவி மணியன் முயற்சிப்பது கண்ணியமான செயல் என்று அவரை பாராட்டச் சொல்கிறீர்களா? அவர் பாஜக வில் சேர்ந்து இந்த வேலைகளை செய்தால் தரகுப் புயல் என்ற பட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் செய்தால் அவர் வெறும் தரகர் மட்டுமே

    ReplyDelete
  3. இது மிக முக்கியமான பதிவு .
    அன்புக்குரிய தோழர்,
    இந்த சிந்தனை மனசாட்சியுள்ள எல்லோருக்கும் வர வேண்டும்.வரும் என்ற நம்பிக்கை எனக்கு ரொம்ப நாளாவே இருக்கிறது. இதில் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் விசயகாந்துக்கும் இருக்கும் தன்னம்பிக்கையும் துணிவும் நம்மவர்களுக்கு இல்லயே. மேலும் விஜயன் அவரது கருத்தைத்தான் பதிந்துள்ளார். அதில் எத்தனை பொறுப்பாக ஆரம்பித்து 3 வரிகளில் சொல்லி இருக்கிறார் அவரிடம் முஷ்டியை முறுக்குவது என்ன நியாயம் ஒடனே அனானின்னு ஆரம்பிக்காதீங்க நான் அனானி இல்லை. அன்பே சிவம்.

    ReplyDelete
  4. சிவசக்தி தோழர், விஜயன் அவர்களுக்கு எதிராக நான் ஒன்றும் முஷ்டியை முறுக்கவில்லை. கண்ணியக்குறைவாக எதுவும்
    எழுதவில்லையே என்றுதான் சொல்லியுள்ளேன். ஒரு வேளை
    தரகு என்ற வார்த்தையை அவர் அப்படி நினைத்திருந்தால் கூட
    அது நியாயம் என்பதை விளக்கியுள்ளேன்.

    தேர்தல் முடிவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களுக்காக
    என்றும் நம்பிக்கையோடு களத்தில் நிற்பது இடதுசாரிகள் மட்டுமே. மற்றவர்களுக்கு தேர்தல் மட்டுமே முக்கியம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தலும் ஒரு இயக்கம், போராட்டம் அவ்வளவுதான்

    ReplyDelete
  5. anbulla thiru raman avargalukku
    neengal sollum idathu saari jothi basu/nirupan chakravarthi yodu mudinthu vittathu
    tamil naatil irandu seat m.p kku jayavidam mandiyitta podu enge sendrathu idathu saarigalin nambikkai
    regards
    gk

    ReplyDelete