Monday, December 9, 2013

ராம கோபாலனுக்கு தலைக்குள் ஒன்றும் இல்லையா?



வீரத் துறவி (!) ராம கோபாலன் தனது தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை, வெளியேயும் ஒன்றும் இல்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார். இது அவரே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம். தன்னிலை வாக்கு மூலம். ஆகவே அதைப் பற்றி நாம் கருத்து சொல்வது நியாயமாக இருக்காது.

ஆனால் அவர் தன்னிடம் உள்ள இரு விஷயங்களைப் பற்றி குறிப்பிடாமல் மறந்து போய் விட்டார்.

மத வெறியும் கலவர வெறியும் நிரம்பியுள்ள இதயம்.

மாற்று மதத்தவர் மீது வன்மத்தையும் துவேஷத்தையும் விஷமாகக் கக்கும் நாக்கு.

தலைக்குள்ளே எதுவும் இல்லாததால்தான் இதயமும் நாக்கும் செயல்படுகிறதோ?

7 comments:

  1. இந்தியாவுக்கு மோடி என்றால் தமிழகத்துக்கு இராம கோபாலன் ! அவ்வளவே !

    ReplyDelete
  2. நான்கு மாநில தேர்தல் குறித்த கருத்து என்ன? பி ஜே பி யின் எழுச்சி குறித்து என்ன சொல்கிறீர்?

    ReplyDelete
  3. மிசோரத்தில் 40 தொகுதிகளில் 17இல் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாஜக வென்றுள்ளது .. இதுதான் உண்மையான கேடி மேனியா..கட்சி ஆரமித்த இரு மாதத்தில் 28 வென்ற ஜெஜ்ரிவால் ஹீரோவா அல்லது பல ஆண்டுகள் கட்சி நடத்தியும் கூட , அதுவும் தேசிய கட்சி என்று கூறியும் கூட மோடி பிரதம வேட்பாளராக அறிவித்து பல மாதம் ஆகியும் கூட , போலியான விளம்பரங்களின் மூலம் மோடியின் இமேஜை உயர்ந்துவிட்டதாக மீடியாக்கள் மூலம் தொடர்ந்து பொய்யை பரப்பியும் கூட மிசோரத்தில் அவர்களின் இருப்பு வெறும் 1 தான்.

    பாஜகவின் மோடியின் இமேஜ் என்பது அவரகளின் 20 வருட ஆதிக்கம் உள்ள 6 மாநிலங்களில் மட்டும் தானே ஒழிய எந்த ஒரு புதிய மாநிலத்திலும் இல்லை..ஒருவேளை ஊடகங்கள் கூறுவது போல மோடி புகழ் அப்படி இப்படி என்றால் எதற்காக கர்நாடகத்தை இழக்க வேண்டும்..அல்லது ஓடிசாவில் சில மாதங்களுக்கு முன்னர் முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கேவலமான நிலையில் நவீன் பட்நாயக்கிடம் 66 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோற்க வேண்டும்...இதன் மூலம் மோடியின் இமேஜ் என்பது பூஜ்யம் தான்.மோடி என்பவர் ஊடகங்களால் ஊதப்படும் பலூன் மட்டுமே...இதுதான் உண்மையில் கேடிமேனியா...

    ReplyDelete
  4. இவனுங்க இப்படி தான் இருப்பாங்க boss

    ReplyDelete
  5. what about kalaignar' , Amma and vijayakanth's thaajaa on minority ?
    We salute the sacrifice of Veerathuravi Ramagopalanji

    ReplyDelete