Wednesday, December 18, 2013

தமிழருவி மணியன் ஐயா ஜாக்கிரதை, அரவான் போல களப்பலி ஆகாதீர்கள்



நேர்மையான அரசியல்வாதி என்று இத்தனை நாள் போட்டிருந்த முகமுடியை தரகுப்புயல் தமிழருவி மணியன் கழற்றி எறிந்து எத்தனையோ நாள் ஆகி விட்டது.

சிறுபான்மை அமைப்பு ஒன்று தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது, தனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று அவர் விடுத்த அறிக்கை விளம்பரத்திற்காக எந்த அளவு வேண்டுமானாலும் கீழிறங்கக் கூடிய கேவலமான மனிதர் என்று தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜாக்கிரதை ஐயா, உங்கள் உயிருக்கு ஆபத்து என்று நீங்களே அறிக்கை கொடுத்து விட்டீர்கள். இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொண்டு மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கும்பல் உங்கள் உயிருக்குக் கூட ஆபத்து விளைவிக்கலாம்.

ஏற்கனவே நரேந்திர மோடி கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குல்லாவும் புர்க்காவும் கொடுத்து முஸ்லீம்கள் கூட அவரது கூட்டத்தில் பெருமளவு கலந்து கொள்கிறார்கள் என்று நாடகம் போட்டது அம்பலமானது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

அனுதாப அலை தேட அப்படி வேஷம் போட்ட மனிதர்கள் யாரையாவது அனுப்பி விடப் போகிறார்கள். பாண்டவர்களால் களப்பலி கொடுக்கப்பட்ட அப்பாவி அரவானாக மாற்றி விடப் போகிறார்கள். ஜாக்கிரதை.


4 comments:

  1. மோடியை பிரதமராக்க பிஜேபி ஆட்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்! இது அவருக்கு புரியாததே பரிதாபம் !

    ReplyDelete
  2. காவி கும்பலுக்கு இவரே ஐடியா கொடுத்துவிட்டாரே ? காந்தியை கொன்று பழியை முஸ்லிம்களின் மேல் பழியை போட்டது போல இவரை காலிபன்னிவிட்டு அனுதாப அலைகளில் வோட்டு பொருக்க நினைப்பார்கள். ஜாக்கிரதை ஜாக்கிரதை.

    மகாராஜா

    ReplyDelete
  3. அப்போ கோத்ராவில் ரயிலில் 50 பேரைக் கொளுத்தியதும் இந்துக்கள்தான், எங்கள் மீது பழிபோடத்தான் இப்படிச் செய்தார்கள் என்று சொல்கிறீர்களா.

    கோபாலன்

    (நமது இசுலாமிய ந்ண்பர்கள் இதையும் வெளியிடலாமே)

    ReplyDelete