Friday, September 6, 2013

மந்திரி பதவி பறிபோக மனுஷ்யபுத்திரன் காரணமா?



பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனையை மீண்டும் ஒரு முறை அம்மா முறியடித்து விட்டார்.  

மதுரை புத்தக விழாவில் அமைச்சர் மிகச் சிறப்பாக அறிவார்ந்த முறையில் பேசினார். நல்ல வாசிப்பு அனுபவம் உள்ளவர் போலும். புத்தகக் கொள்கையை அறிவிப்போம், மனுஷ்யபுத்திரன் சொன்னது போல என்று பல முறை கூறினார் என்றெல்லாம் மனுஷ்ய புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியபோதே அமைச்சருக்கு வில்லங்கம் ஆரம்பிச்சாச்சு என்று  நினைத்தேன்

கலைஞர் 90 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரை மேற்கோள் காட்டி பாராட்டி பேசினால் அதை எப்படி ஜெ வால் சகித்துக் கொள்ள முடியும்? அம்மா தன் முந்தைய சாதனையை முறியடித்து அமைச்சரை நீக்கி விட்டார்.

இனி எந்த அமைச்சரும் மனுஷ்ய புத்திரன் இருக்கும் மேடையில் ஏறவே மாட்டார்கள் என்பது உறுதி.

2 comments:

  1. "மனுஷ்யபுத்திரன்" என்ன பெயர் இது. அப்போ மற்றவர்கள் என்ன மிருகத்தின் புத்திரர்களா? இதை நான் சொல்லவில்லை வலைப் பதிவுகளில் அங்கங்கே தென்படுகிறது. தோழர் இதையும் கவனிக்க வேண்டும். மற்றபடி மாற்றம் ஒன்றே மாறாதது இது ஜெயாவின் கொள்கை. அதை தாங்கள் புரிந்து கொள்ளாதது உங்கள் தவறுதானே. என்ன நான் சொல்வது சரிதானே. "என்னமோ போடா மாதவா ஒன்னுமே புரியல "

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete