Tuesday, September 17, 2013

மீண்டும் பெரியார் வர வேண்டும், கையில் தடியோடு





பெண்களை பேதையாய் எண்ணி
அடிமைகளாய் நடத்திய
அக்கிரமம் நீங்க
குரல் கொடுத்தீர்.

சமத்துவமும் சமூக நீதியும்
மலர காலமெல்லாம்
உழைத்தீர்கள்

மூளைச்சலவை செய்து
மூடத்தனத்தை வளர்த்த
மதங்களுக்கு எதிராய்
உயிருள்ளவரை பாடுபட்டீர்.

உடல் பிணி சுமந்து
ஊரூராய் அலைந்தாலும்

போகப் பொருளாய்
பெண்களைப் பார்க்கும்
பார்வை மங்கிடவில்லை.

அரசியல் ஆதிக்கம் பெற
ஜாதியின் ஆதிக்கத்தை
நீட்டிக்கும் அவலம்
மாறிடவில்லை.

பத்து லட்ச ரூபாய்
சிலை செய்து
பாழுங்கடலில்
வீசியெறியும் மூடத்தனம்
குறையவில்லை.

அக்கிரம் செய்வோரை
அடித்தாவது திருத்திட
நீங்கள் மீண்டும்
பிறந்திட வேண்டும்.
கையில் தடி கொண்டு



1 comment:

  1. சபாஷ் !! பகுத்தறிவு மறுபிறவியை நம்பும் அளவு வளர்ந்துவிட்டது !! அடுத்து 'திவசம்' குடுக்க வேண்டியதுதான்!!

    ReplyDelete