Sunday, September 1, 2013

காலிப்ளவர் பொறியல் - இப்படியும் செய்து பாருங்களேன்

காலிப்ளவரை சின்ன துண்டங்களாக நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன்
(ஒரிஜினல் பச்சைப்பட்டாணி வாங்கி உரித்து வைத்தது) சேர்த்து
நல்ல கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து ஒரு இருபது நிமிடம் ஊற
விடுங்கள்.

அந்த நேரத்தில் இரண்டு கைப்பிடி வேர்கடலை எடுத்து நன்றாக
வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக்
கொள்ளவும்.

இரண்டு வெங்காய, இரண்டு தக்காளி நீள வாட்டில் வெட்டிக்
கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு
போடவும். கடுகு வெடித்ததும் கொஞ்சம் சீரகத்தையும்
சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை
வதக்கவும். பிறகு தக்காளியை சேர்க்கவும். தக்காளி கொஞ்சம்
வதங்கியதும் ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு சேர்த்து
சிறிது நேரம் கிளறவும். 

அதன் பின்பு இந்த கலவையில் ஏற்கனவே ஊறிக் கொண்டிருக்கும்
காலிப்ளவர் மற்றும் பச்சைப்பட்டாணியை (தண்ணீரை வடித்து
விட்டு ) சேர்த்து மீண்டும் கிளறவும். ஒரு பத்து நிமிடங்கள்
கழித்து இதோடு ஏற்கனவே பொடித்து வைத்துள்ள 
வேர்கடலை பொடியை தூவி ஒரு நிமிடம் மீண்டும் 
கிளறி எடுத்து விடவும்.

சாத வகைகளுக்கும் சரி சப்பாத்தி பூரிக்கும் நல்ல 
சைட் டிஷ்ஷாக இருக்கும்.

பொறியல் புது விதமாக செய்கிறேனே என்று பிடிவாதமாக
செய்தாலும் எப்படி இருக்குமோ என்று மனதுக்குள்
பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருந்தது. 

மனைவி, மகன் இருவருமே கை கொடுத்து சூப்பர்
என்று சொன்ன பின்புதான் எனக்கு ருசி தெரிந்தது. 


2 comments:

  1. நீங்க சமையலிலும் ஒரு கலக்கு கலக்கிறிங்க.

    ReplyDelete