Friday, December 16, 2011

எலும்பும் ரத்தமும் ருசிக்கும் பேய்கள்

பேயரசு ஆட்சி செய்தால் 
பிணம் தின்னும் சாத்திரங்கள்!
பாரதி சொல்லி விட்டுப் போனான்.
கவிஞன் சொல் சத்திய வாக்கு
எங்கெங்கும் பேய்கள் ஆட்சி,
சத்தியத்திற்கு என்றென்றும் 
சோதனைதான்.
எலும்பும் ரத்தமும்
ருசிக்கும் பேய்கள்
உண்மைகளை மட்டும்
விட்டா வைக்கும்?
இரவில் ஆட்டம் நடக்கட்டும்,
ஒளி  வரும் நேரம் 
எல்லாம் ஒடுங்கியும் போகும்.
அது வரை ஆடட்டும்
நன்றாக ஆடட்டும்
   

No comments:

Post a Comment