Friday, February 14, 2014

அடுத்து கையெறி குண்டா? ஏ.கே 47 ஆ - சூப்பர் எம்.பிக்கள்




நேற்று நாடாளுமன்றத்தில் பெப்பர் ஸ்ப்ரே உபயோகித்து 
சக உறுப்பினர்களைத் தாக்கி இந்தியாவிற்கு பெருமை
சேர்த்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடுத்த
ஆயுதம் என்ன?

கையெறி குண்டா இல்லை ஏ.கே 47 ஆ?

இது போன்ற ஆட்களைத் தேர்ந்தெடுத்த மக்களைப்
பார்த்து அனுதாபப்படுவதா? 

இல்லை உங்களின் அறியாமைக்கு நன்றாக வேண்டும்
என்று சபிப்பதா?

இந்த கூட்டத் தொடரிலிருந்து நீக்குவது மட்டும்
போதாது. அவர்கள் இனி எந்த தேர்தலிலும் போட்டியிடுவதும்
தடை செய்யப்பட வேண்டும்.

இங்கிலாந்து அரசின் செவிகளுக்கு எட்ட வேண்டும் 
என்பதற்காக, அதே நேரம் யாருக்கும் எந்த பாதிப்பும்
ஏற்படக் கூடாது என்ற அக்கறையோடு வெடிகுண்டு
வீசிய பகத்சிங் எங்கே? வெட்டிப் பரபரப்புக்காக
பெப்பர் ஸ்ப்ரே வீசிய இந்த மனிதர்கள் எங்கே?

பகத்சிங் தேசத்திற்காக உயிரைக் கொடுத்த உன்னத
புரட்சியாளன். இவர்கள் தேசத்தை தலைகுனிய வைத்த
உன்மத்தர்கள். 

1 comment: