Monday, February 17, 2014

ஆறு மாதமே போதுமே மோடி அவர்களே....



ஆட்சிக்கு வந்தால் அறுபது மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று வழக்கம் போல ஒரு வீர வசனம் பேசியுள்ள மோடி அவர்களே, உங்களுக்கு எதற்கு அறுபது மாதங்கள் வேண்டும்?

நல்லது செய்வதற்குத்தான் அவ்வளவு அவகாசம் வேண்டும். நீங்கள் என்னவோ மக்களை பிளவு படுத்தி கலவரங்களை தூண்டப் போகிறீர்கள். இரண்டு நாளில் மூவாயிரம் பேரைக் கொன்ற சாதனைத் திலகம் அல்லவா நீங்கள்?

இந்தியா முழுதும் இருக்கிற அரசு நிலங்கள், ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து பெரும் பணக்காரர்களுக்கு அளிக்கப் போகின்றீர்கள்?

இருக்கிற கொஞ்ச நஞ்ச நல்ல சட்டங்களை தூக்கியெறிந்து சர்வாதிகாரியாக மாறப் போகின்றீர்கள், தேசத்தையே வெறும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு உங்களுக்கு எதற்கு அவகாசம்?

ஆனால் மறந்து விடாதீர்கள்.

பதிமூன்று நாட்களும், பதிமூன்று மாதங்களும் பின்பு ஐந்தாண்டுகளும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டு “ஒளிரும் இந்தியா” என்ற போலி முழக்கத்தோடு மக்களிடம் சென்ற உங்கள் முன்னோரை இந்திய மக்கள் நிராகரித்த அனுபவத்தை மறந்து விடாதீர்கள். உங்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கப் போகிறது. அதற்கு தயாராக இருங்கள்.

2 comments:

  1. உங்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கப் போகிறது. அதற்கு தயாராக இருங்கள்
    >>
    இப்படிலாம் பயமுறுத்தாதீங்கப்பா! பாவம் மோடி. வெளிநாட்டு தெரு குஜராத்துல இருக்குறதா காட்டுனாங்களே! அதுப்போல, அந்த அஞ்சு வருசத்துக்குள்ள மக்கள் வீட்டுல இருக்கும்போதே அவங்க ஓட்டு, ஓட்டுப் பெட்டியில் விழ வைக்கும் சாமர்த்தியம் மோடி ஐயாக்கு உண்டு.

    ReplyDelete
  2. நல்ல எச்சரிக்கை ,மக்களுக்கும் !

    நம்ம பேட்டை பக்கம் தலயை காட்டுங்க ...http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
    பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்

    ReplyDelete