Thursday, October 3, 2013

இரு கட்சிகளின் மோதல் – நடுத்தெருவில் பதினைந்து லட்சம் பேர்


 
இது அமெரிக்க சோகம். வீழ்ந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் விளைவு. ஆம் அமெரிக்க அரசின் கஜானாவில் கையிருப்பு இல்லாமல் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க அரசு ஊழியர்களின் அவலம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நெருக்கடி நினைவில் உள்ளதா? அமெரிக்கா தனது கடன் அளவை உயர்த்த அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதிக்குமா இல்லையா என்ற பதட்டம் நிலவியதையும் இறுதியில் அனுமதி கிடைத்து அமெரிக்க அரசாங்கம் திவாலாகும் சூழல் உருவானது.

அதே பிரச்சினைதான் இப்போதும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு தனது செலவுகளை ஈடு செய்ய வேண்டுமானால் கடன் வாங்கியே ஆக வேண்டும். அப்படி கடன் வாங்க வேண்டுமானால் அதன் அதிகபட்ச கடன் வரம்பு உயர்த்தப்பட வேண்டும். அதற்கு நாடாளுமன்ற அனுமதி வேண்டும்.

அமெரிக்க செனட் சபையில் பாரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு நூலளவு  பெரும்பான்மை  இருந்த போதிலும் காங்கிரஸிலோ குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மை, ஜனநாயகக் கட்சி அங்கே பலவீனமாக உள்ளது. அதனால் கடன் தொகையை உயர்த்தும் முயற்சி அங்கே வெற்றி பெறவில்லை.

நம்ம ஊர் கலைஞர்  காப்பீட்டுத் திட்டம் போல ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமுலாக்க்குவதை குடியரசுக் கட்சி எதிர்க்கிறது. இது என் கனவுத் திட்டம் என்று ஒபாமா மறுத்து விட்டார். இந்த இரு கட்சிகளின் மோதல்களால் அமெரிக்க அரசு தனது செலவினங்களை சமாளிக்க பல அரசு அலுவலகங்களை மூடி விட்டது. அத்தியாவசியமற்ற பணிகள் என்ற பெயரில் மூடப்பட்ட அலுவலகங்களில் மட்டும் பணியாற்றி வரும் பதினைந்து லட்சம் ஊழியர்கள் இன்று பணியில்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

அரசுக்கு இவர்கள் செய்யும் பணிகள் அத்தியாவசியமற்றதாக தோன்றலாம். ஆனால் அவர்கள் வாழ்க்கை நடத்த பணி அவசியமாயிற்றே!. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. அமெரிக்க பொருளாதாரம் என்று நிமிருமோ? இவர்களுக்கு மீண்டும் வேலை எப்போது கிடைக்குமோ? அதுவரை அமெரிக்க அடுப்புக்களிலும் பூனை உறங்கத்தான் செய்யும்.


முதலாளித்துவக் கட்சிகள் அது அமெரிக்காவில் உள்ள கட்சிகளாக இருந்தாலும் சரி, இந்தியாவில் உள்ள காங்கிரஸ், பாஜக வாக இருந்தாலும் சரி, அவை சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாது என்பதற்கு இதை விட இன்னும் வேறு உதாரணம் வேண்டுமோ என்ன? மக்களின் வாழ்வைப் பறிப்பதில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் வேறுபாடு கிடையாது. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். 

1 comment:

  1. உள்ளுக்குள் ஆயிரம் ஓட்டை. உலகத்தை நாட்டாண்மை செய்ய ஆசை.

    ReplyDelete