Monday, October 14, 2013

ஜெயா டி.வி பிழைப்பு நடத்த மட்டும் இந்த முகங்கள் தேவையோ?

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா குறித்து ஏற்கனவே
ஏராளமான விமர்சனங்கள் எல்லா ஊடகங்களிலும் வந்து
விட்டது.

அந்நிகழ்வை ஜெயா டி.வி நேற்று ஒளிபரப்பியது. இன்றும்
ஓளிபரப்பப் போகிறது. கொஞ்சம் நேரம் பார்த்ததே 
கொடுமையாக இருந்தது. விஜய் நடித்த ஒரு படத்தில்
பொன் மகள் வந்தாள் பாட்டின் ரீமிக்ஸ் பார்க்க சகிக்காமல்
உடனடியாக சொர்க்கம் படத்தின் சி.டி வாங்கி வந்து
சிவாஜியின் நடிப்பில் அந்த பாட்டை மட்டும் பார்த்தவன் நான்.
அந்த பாட்டினை நேற்று ஸ்ரீகாந்த் கொலை செய்த போது
விஜயே பரவாயில்லை போல இருக்குல என்று என் மகன்
வேறு வெறுப்பேற்றினான். அம்மாவின் புகழை 
தலைவா விஜய் பேசிய இன்னொரு கொடுமை வேறு.

இன்றைக்கு அந்த நிகழ்ச்சிகான விளம்பரங்களைப் பார்த்தேன்.
ஒரு விளம்பரத்தில் சிவாஜி, கமல் முகங்கள், இன்னொரு
விளம்பரத்தில் அஜித், விஜய், சூர்யா முகங்கள்.

நிகழ்ச்சியில் இவர்களை எல்லாம் அசிங்கப் படுத்தினாலும்
அந்த நிகழ்ச்சியின் மூலம் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தவும்
விளம்பர வருமானத்தை அதிகரிக்கவும் இந்த முகங்கள்தான்
ஜெயா டி.வி க்கு தேவைப்படுகிறது.

எல்லாம் காசுடா சாமி
 

11 comments:

  1. //இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா...

    அந்நிகழ்வை ஜெயா டி.வி நேற்று ஒளிபரப்பியது. இன்றும்
    ஓளிபரப்பப் போகிறது. கொஞ்சம் நேரம் பார்த்ததே
    கொடுமையாக இருந்தது.//
    சந்தேகமே இல்லை. அந்த நிகழ்ச்சி கொடுமையானதாக தான் இருக்கும்.

    ReplyDelete
  2. வணக்கம் தோழரே
    அது என்ன அனானின்னு போஸ்ட் பன்றவங்கல்லாம் அனாமதேயம்னு ஆயிடுமா ?
    ஆனாலும் அந்த படுபாவி அனானி உங்களை எந்த அளவுக்கு சோதிச்சிருக்கார்னு புரியுது.
    ஒன்னு சொல்லட்டுமா தோழரே
    நான் அவன் இல்லை. அந்த மாதிரி அனாமதேயமுமில்லை. நான் இப்பத்தான் ஒரு வாரமா உங்க பதிவுகளை பார்க்கிறேன்.
    டிரேட் ஊனியன் ஒர்கர்னு அறிமுகப்படுத்திகிட்டிருந்ததால
    ஏதாவது உருப்படியா பண்ணி இருப்பீங்கன்னு ஆர்வமாக பாத்தேன் ம்ஹூம் வெறும் சுய தம்பட்டம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. இதில் ஒரு நல்ல விஷயம் உங்கள் பக்கத்தில் தமிழில் பதிவிட முடியாததால் வெளியேறி வேறு பக்கத்தில் TYPE செய்து நகல் எடுத்து வந்து போஸ்ட் செஞ்சா நாங்க அனாமதேயமா? நல்ல வேளை உங்களை நம்பி அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்னு இருந்தேன். இப்ப அதுக்கு அவசியம் இல்லை. இப்ப உங்க பதிவுகளை பத்தி நினைத்தால் எனக்கு சிப்பு சிப்பா வரலை ஏன் தெரியுமா ? திருவிளையாடல் தருமி மாதிரி நன்பர்களுக்கு கேள்வி கேக்க மட்டும்தான் தெரியும் என்பது தெரிந்த விஷயம்தானே

    ReplyDelete
  3. வணக்கம் தோழரே
    அது என்ன அனானின்னு போஸ்ட் பன்றவங்கல்லாம் அனாமதேயம்னு ஆயிடுமா ?
    ஆனாலும் அந்த படுபாவி அனானி உங்களை எந்த அளவுக்கு சோதிச்சிருக்கார்னு புரியுது.
    ஒன்னு சொல்லட்டுமா தோழரே
    நான் அவன் இல்லை. அந்த மாதிரி அனாமதேயமுமில்லை. நான் இப்பத்தான் ஒரு வாரமா உங்க பதிவுகளை பார்க்கிறேன்.
    டிரேட் ஊனியன் ஒர்கர்னு அறிமுகப்படுத்திகிட்டிருந்ததால
    ஏதாவது உருப்படியா பண்ணி இருப்பீங்கன்னு ஆர்வமாக பாத்தேன் ம்ஹூம் வெறும் சுய தம்பட்டம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. இதில் ஒரு நல்ல விஷயம் உங்கள் பக்கத்தில் தமிழில் பதிவிட முடியாததால் வெளியேறி வேறு பக்கத்தில் TYPE செய்து நகல் எடுத்து வந்து போஸ்ட் செஞ்சா நாங்க அனாமதேயமா? நல்ல வேளை உங்களை நம்பி அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்னு இருந்தேன். இப்ப அதுக்கு அவசியம் இல்லை. இப்ப உங்க பதிவுகளை பத்தி நினைத்தால் எனக்கு சிப்பு சிப்பா வரலை ஏன் தெரியுமா ? திருவிளையாடல் தருமி மாதிரி நன்பர்களுக்கு கேள்வி கேக்க மட்டும்தான் தெரியும் என்பது தெரிந்த விஷயம்தானே

    ReplyDelete
  4. மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்கத் தெரியாத
    முட்டாள் அனாமதயமே, உன்னையெல்லாம் இன்னும் நல்லவன்னு உங்க ஊரில நம்புறாங்களே, ஈஸ்வரா, பெருமாளே இதையெல்லாம் தட்டிக் கேட்க மாட்டாயா?

    ReplyDelete
  5. நல்ல வேளை நான் நிகழ்ச்சியை பார்க்கவே இல்ல. எல்லோரும் அம்மாவுக்கு காவடி தூக்கியதால பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருந்தேன்

    ReplyDelete
  6. மேற்கண்ட அனாமதேயம் மற்றும் உங்கள் கோபம் அதற்கான காரணம் என்ன என்பது புரியவில்லை.. தயவு செய்து விளக்கவும்
    R Chandrasekaran
    rcs1961@hotmail.com

    ReplyDelete
  7. திருவிளையாடல் தருமி மாதிரி நன்பர்களுக்கு கேள்வி கேக்க மட்டும்தான் தெரியும் என்பது தெரிந்த விஷயம்தானே

    ReplyDelete
  8. திரு சந்திரசேகரன் - உங்கள் அடையாளத்தோடு வருகை தந்தமைக்கு நன்றி. அனாமதேயமாக வக்கிரமாக பின்னூட்டம் இடும் நபர் யாரென்று எனக்கு தெரியும். அவரவர் எழுத்து நடையிலிருந்தே அதை கண்டு பிடிக்கவும் முடியும். அந்த வக்கிரம் பிடித்த மனிதனுக்கு எவ்வளவு சொன்னாலும் உரைப்பதில்லை

    ReplyDelete
  9. ஆ...ரம்பம் . மக்கள் சிந்திக்க தேவையான கேள்விகளை நான் எழுப்புகிறேன். அதிலே உங்களுக்கு என்ன பிரச்சினை?

    ReplyDelete
  10. அய்யா தோழரே
    அந்த அனாமதேயம் எவனோ?
    அவனை தேடி போய் புத்தி சொல்லுற வேலைய பாருங்க அதை விட்டுட்டு என்னை மாதிரி ஆளுங்களை வாய்க்கு வந்தபடி பேசறதி ஞாயமா ? நாகரீகமா ? கொஞ்சம் யோசிங்க ?
    உங்க பதிவை பாத்துட்டு கருத்து எழுதுகிறவன் உங்க பார்வையில் முட்டாள் !
    அந்த அனாமதேயம் அனானி, உங்கள் மனதை காயப்படுத்த எந்த உரிமையும் இல்லை.
    அதே போல் உங்களுக்கும் யாரையும் கடும் வார்த்தைகளை கொண்டு பேசும் உரிமையும் இல்லை.
    பாவம் அந்த சந்திரசேகரர் உங்கள் பக்கத்துக்கு நான் எப்படி புதிதாக வந்து கமெண்ட் போட்டேனோ, அதே போல்தான் அவரும் புதுசு போல் தெரிகிறது. அவர் ஏற்கனவே அனானி என்று பதிவிட்டிருந்தாலும் அதே பக்கத்தில் தன பெயரை ஏற்கனவே பதிந்துதான் வைத்திருந்தார் அதைகூட பார்க்காமல் வைதிருந்தீர்கள். தோழரே இது ஜனநாயக நாடு. அதனால்தான்,
    உங்களால் உள்ளூர் க....னா முதல் அம்பேரிக்கவின் ஒப்பாம்மா வரை விமர்சிக்க முடிகிறது. அதைத்தான் நானும் சொல்கிறேன். இது ஜனநாயக நாடு இங்கே விமர்ச்சனங்களுக்கு விலக்களிக்கப்பட்டவர் எவரும் இல்லை.. அன்பே சிவம்

    ReplyDelete
  11. திரு சந்திரசேகரன் தன் அடையாளத்தோடு வந்தார். அவருக்கு நான் ஒழுங்காகத்தான் பதிலளித்துள்ளேன். இந்த சிண்டு முடியும் வேலையில் வக்கிரம் பிடித்த அனாமதேயத்தின் வன்மமும் மனநிலை பாதிக்கப்பட்ட தன்மையும் புரிகிறது. நேரடியாக வர தைரியமில்லாத ஆட்களுக்கு, நாகரீகம் இல்லாத ஜன்மங்களுக்கு நாகரீகமாக பதில் அளித்தாலும் புரியாது. வினை எப்படி இருக்கிறதோ அதற்கேற்றார்போல்தான் எதிர்வினையும் அமையும்

    ReplyDelete