Thursday, October 31, 2013

ராகுல் காந்திக்கு பேச சொல்லிக் கொடுங்கப்பா.....

காங்கிரஸ் கட்சியில் பேச்சாளர்களுக்கு வகுப்பு எடுத்தார்களாம்.
எனக்கென்னமோ ராகுல் காந்திக்குத்தான் முதலில் வகுப்பு
தேவைப்படுகின்றது என்று நினைக்கிறேன்.

எல்லா பேச்சும் ஒரே சொதப்பல்தான்.

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு பாகிஸ்தான்
உளவுத்துறை பேசிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி
வாங்கிக் கட்டிக் கொண்டார்.

எங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் புந்தல்கண்ட் பகுதியை
மாற்றிக் காட்டுவோம் என்று நேற்று பேசியுள்ளார்.

இந்தியாவே உங்கள் ஆட்சியில்தானே உள்ளது. என்னத்தை
கிழித்தீர்கள் என்ற கேள்விக்கு பாவம் அவரால் பதில்
சொல்ல முடியவில்லை.

தம்பீ நீ ரொம்ப வீக்கா இருக்க!
உனக்கு அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது.
அதனால குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தரேன்.
சாப்பிட்டு சமத்தா இரு
 

2 comments:

  1. ஒரு மௌன ஆசாமிய வச்சு 5 வருஷம் ஓட்டிட்டாங்க. இப்போ பச்ச புள்ளைய வச்சி பதவிய பிடிக்க பாக்குது காங்கிரசு . என்ன கொடுமைடா சாமி

    ReplyDelete
  2. பச்ச புள்ளய இப்படி குதற்கமா திட்டலாமா?

    ReplyDelete