Sunday, October 20, 2013

எல்லோரும் எங்கே போனார்கள் ?



ஐயா தமிழருவி மணியன் பற்றி நேற்று எழுதும்போதே மீண்டும் ஒரு கடுமையான விவாதத்திற்கு தயாராகத்தான் எழுதினேன். ஏனென்றால் அவர் தனது காவிக்கொடி லட்சியப் பயணத்தை, நரவேட்டை மோடிக்கு மகுடம் சூட்டும் இலக்கோடு தொடங்கியபோது எண்ணற்ற பின்னூட்டங்கள் வந்தன.

தூயவர் ஒருவரை நான் களங்கப் படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. நோக்கத்தில் தூய்மை இல்லாத மனிதன் வாழ்வில் நேர்மையாய் இருந்து என்ன பயன்? சரி மீண்டும் கேள்விக் கணைகள் குவியப் போகிறது என்று காத்திருந்தேன்.

நேற்றைய பதிவை கிட்டத்தட்ட எழுநூறு பேருக்கும் மேல் படித்ததாக ப்ளாக்ஸ்பாட் புள்ளி விபரம் சொல்கிறது. ஐயா தமிழருவி மணியனுக்கு ஆதரவாக இன்னும் ஒரு குரல் கூட வரவில்லை. கடந்த முறை அவருக்கு ஆதரவாக சண்டை போட்டவர்கள் எங்கே போனார்கள்?

அவருடைய  உண்மை நோக்கத்தை புரிந்து கொண்டார்களோ?
மீண்டும் மீண்டும் அவர் அளிக்கிற விளக்கங்கள் பொய்க்கு வேடம் கட்டுகிற ஒப்பனை என்பதை அறிந்து கொண்டார்களோ
நல்லது நடந்தால் சரிதான்.

1 comment:

  1. வணக்கம்
    எது நடக்கிறதோ அது நன்றாக நடந்தால் சரி..... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete