Monday, October 14, 2013

பக்திமான்கள்தான் பதில் சொல்ல வேண்டும்


 தொலைக்காட்சி அறிவிப்பாளர் திருமதி பாத்திமா பாபு அவர்களின்
சுவரில் படித்த சுவாரஸ்யமான கதை இது.

மிகவும் ரசித்தேன். அதனால் உங்களுக்கும் பகிர்கிறேன்


ஒரு தேவாலயத்துக்கு அருகில் ஒரு மதுபானக் கடை திறக்கப்பட்டது. தேவாலயத்தில் தினமும் அதன் வியாபாரத்திற்கு எதிராய் பிரார்த்தனை நடத்தப்பட்டது. 

ஒரு நாள் மின்னல் தாக்கி அந்த மதுபானக் கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது.


 கடையின் உரிமையாளர் அவர்களது பிரார்த்தனையால் தான் தன் கடை எரிந்து நாசமானது என்று கூறி பாதிரியார்களுக்கு எதிராய் வழக்கு தொடர்ந்தார். 

பாதிரியார்கள் இதை முற்றாக மறுத்தார்கள். 


அப்போது நீதிபதி சொன்னார் - "இது மிகவும் சிக்கலான வழக்கு. மதுபானக் கடை உரிமையாளர் பிரார்த்தனையின் சக்தியை நம்புகிறார்.....ஆனால் மத நம்பிக்கையுள்ள தேவாலயமோ இதை அடியோடு மறுக்கிறது. எனவே தீர்ப்பளிப்பது கடினம்" என்று.

12 comments:

  1. நிஜத்தை சொல்லும் சிறுகதை

    ReplyDelete
  2. It is not the matter where u are. your thoughts are to be in the focus of God. it is true. it is simple to follow. u are no need to go to temple even. simply thing God and chant his/her name. He will be with you always...that is devotion.

    ReplyDelete
  3. இந்தியில் வெளிவந்த OMG படம் இந்த கதை தான். மிக சுவாரஸ்யமான படம். நேரம் இருந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  4. நானும் நல்லா ரசித்தேன்.

    ReplyDelete
  5. அருமையான கதை.

    முழுமூடர்களின் மண்டையில் வேல் சொருகும் படைப்பு.

    எத்தனை தடவையும் பாராட்டலாம்.

    பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. கம்யுனிசம் பேசிக்கொண்டு கடவுளை கும்பிடுவது போல்-ஊங்கல மாதிரி

    kannan_babu84@yahoo.com

    ReplyDelete
  7. திரு கண்ணன் பாபு - நான் கடவுளை வணங்குவதில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் உறுப்பினர்களை தத்துவார்த்தரீதியில் பயிற்றுவித்தே கடவுள் நம்பிக்கை அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை உருவாக்க முயல்கிறது. உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாத போது ஏன் இப்படி தவறாக எழுதுகிறீர்கள்? அதே போல் தமிழில் தட்டச்சு செய்வதிலும் கவனமாக இருக்கவும்

    ReplyDelete
  8. திரு ராமன்,தட்டச்சு தவறுக்கு வருந்துகிறேன்.ஆனால் இது போல் சிறு குழந்தை போல் எழுதாதீர்.

    ReplyDelete
  9. திரு கண்ணன் இதிலே சிறு குழந்தை போல எழுத என்ன இருக்கிறது?. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்

    ReplyDelete
  10. மதிப்பிற்குறிய தோழர் ராமன் அவர்களுக்கு..
    உங்கள் பதிவைப் படித்தேன். மிகவும் ரசித்தேன்.. உண்மையில் எனக்கும் இதைப் போன்ற ஒரு அனுபவம். அதை என்னுடைய ப்ளாக்கில் பகிர்ந்திருக்கிறேன்.. அவசியம் படிக்கவும்.. மேலும் நான் உங்களுடைய ப்ளாக்கை தொடர்ந்து படிப்பவன். உங்களை என்னுடைய ப்ளாக்கில் அவ்வப்போது refer செய்திருககிறேன்.. நேரம் இருந்தால் படித்துவிட்டு கருத்தைக் கூற அழைக்கிறேன். நன்றி
    பத்ரிநாத்

    ReplyDelete
  11. சாரி என்னுடைய ப்ளாக் முகவரி http://silanerangalilsilakaruththukkal.blogspot.in/2013/10/blog-post.html

    ReplyDelete
  12. உங்கள் வருகைக்கு நன்றி திரு பத்ரிநாத். உங்க வலைப்பக்கமும் சென்று வந்தேன். நன்று, வாழ்த்துக்கள்

    ReplyDelete