Thursday, July 18, 2013

கவிஞர் வாலி மரணம் அடையவில்லை

 

தமிழ் திரையுலகிற்கு தொடர்ந்து இழப்புக்கள்.

பி.பி.எஸ், டி.எம்.எஸ், டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் மறைவைத்
தொடர்ந்து கவிஞர் வாலியும் இப்போதும் மறைந்து விட்டார்.

அனைத்து விதமான கவிதைகளையும் எழுதக் கூடிய வித்தகர்.
இன்றைய இளைஞர்களோடு போட்டி போடக் கூடியவர்,
நன்றி மறவாத குணம் கொண்டவர்.
இறை நம்பிக்கை இல்லாதவர்களைக் கூட இவரது
ராமாயணமும் கண்ணன் கதையும் கவர்ந்திழுத்தது.

இதய அஞ்சலி கவிஞர் வாலி அவர்களே,

உங்கள் முன்னோர்கள் பட்டுக்கோட்டியாரும் கண்ணதாசனும்
தங்கள் பாடல்களால் வாழ்வது போல நீங்களும் நிச்சயம்
மக்கள் மனதில் நிலைத்திருப்பீர்கள்.

உங்களுக்கு மரணம் கிடையாது
 

2 comments:

  1. கவிஞர் வாலி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  2. வாலிக்கு நிகர் வாலி தான்
    தமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்து விட்டது

    ReplyDelete