Monday, July 29, 2013

நல்ல சிதம்பரமும் கெட்ட ப.சிதம்பரமும்




ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது
" இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வ.உ.சி யையும்
பாரதியையும் தந்த தமிழகத்திலிருந்து இந்தியாவை விற்க
துடிக்கும் ப.சிதம்பரமும் பிறந்துள்ளது தமிழகத்திற்கு ஒரு
களங்கம் " என்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான்
பல முரண்பாடுகள் இரு சிதம்பரங்களுக்குள் இருப்பது 
தோன்றியது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும் சரி,
சிவகங்கைச் சீமான் ப.சிதம்பரமும் சரி தமிழகத்தில் 
பிறந்தவர்கள்தான். 

ஆனால் வ.உ.சி யால் தமிழகத்திற்கு பெருமை
ப.சி யால் தமிழகத்திற்கு இழுக்கு.

இருவருமே வழக்கறிஞர்கள்தான்

ஆனால் வ.உ.சி தொழிலாளர்கள் உரிமைக்காக வாதாடியவர்.
ப.சி தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு ஆதரவாக
வாதாடியவர். அரசியலில் தோற்றுப் போனால் எதிர்காலத்தில்
பன்னாட்டுக் கம்பெனிகளின் வழக்கறிஞராக மாறுவார்.

வ.உ.சி வெள்ளைக்காரனுக்கு எதிராக கம்பெனி தொடங்கி
கப்பல் விட்டவர்.
ப.சி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவாக இந்தியக் 
கம்பெனிகளை மூடத் துடிப்பவர்.

வ.உ.சி வாய் திறந்தால் வெள்ளையன் அஞ்சுவான்.
பன்னாட்டுக் கம்பெனிகளோடு கொஞ்சு மொழி பேசுவது ப.சி

வெள்ளையனை எதிர்த்தால் சிறைக்கு சென்றவர் வ.உ.சி.
பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்ப்பவர்களை சிறைக்கு
அனுப்ப விரும்புபவர் ப.சி

ஏழை மக்களுக்கு உணவளிக்க சொத்துக்களை விற்றவர் வ.உ.சி.
ஏழை மக்களின் உணவைப் பறிப்பவர் ப.சி

சுதந்திரப் போராட்டத்தால் அனைத்தையும் இழந்தவர் வ.உ.சி.
உலகமயம் என்ற பெயரில் கொழுத்தவர் ப.சி.

தன் தமிழை சுதந்திரக்கனலை மூட்ட பயன்படுத்தியவர் வ.உ.சி,
தமிழால் தன் அராஜகத்தை மூடி மறைக்க முயல்பவர் ப.சி

வ.உ.சிதம்பரனார் தேசத் தியாகி.
ப.சிதம்பரம் தேசத் துரோகி.

சிதம்பரம் என்ற பெயருக்கு வ.உ.சி பெருமை சேர்த்தார்.
ப.சி அதற்கு இழிவை தேடித்தந்துள்ளார்.
 

1 comment:

  1. இழிவை மட்டுமல்ல தேசத்திற்கு அழிவையும் தேடி தருகிறார்

    ReplyDelete