Wednesday, February 9, 2022

வில்லங்க சாமியாரும் வில்லங்க சிலையும் . . .

 



மோடி பட்டை நாமம் போட்டுக் கொண்டு மயில் இறக்கைகளால் ஆன சால்வை (ஆமாம். அந்த மயிலிறகு சால்வை தயாரிக்க எத்தனை மயில்கள் தேவைப்பட்டிருக்கும்?) அணிந்து ராமானுஜர் சிலையை திறந்து வைத்தது நினைவில் உள்ளதல்லவா?


அந்த சிலையை அமைத்தவர் திருதண்டி சின்ன ஜீயர் எனும் சாமியார். மோடியை வரவைத்த சாமியார் என்றாலே வில்லங்க சாமியார் என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு பதிவு வேறு அவசியமா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் நான் அறிந்த தகவல்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

சாமியார் தொழிலுக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவில் 13 பொறியியல் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருந்தவர். இப்போதும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இவரது பக்த கோடி. வாஸ்து பார்த்து கே.சி.ஆர் கட்டிய புது முதல்வர் மாளிகையில் இந்த சாமியாரைத் தான் முதல்வர் நாற்காலியில் அமர வைத்து ஆசி வாங்கிய பின்பே அவர் அமர்ந்தார்.

திருப்பதி கோயில் வழிபாடுகள் குறித்து இவருக்கும் தேவஸ்தானத்திற்கும் நீண்ட காலமாக வரப்புத் தகறாரு உண்டு. தேவஸ்தானத்துக்காக பஞ்சாயத்துக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதியை “தண்டத்தை தூக்கிப் போட்டு விட்டு தலைமறைவான நீயெல்லாம் பேசக் கூடாது” என்றது தனிக் கதை.

ஜாதி வெறி பிடித்த சாமியார் என்பதற்கு அவர் சமீபத்தில் உதிர்த்த தத்துவ முத்துக்களே உதாரணம். அந்த அரிய கருத்து கீழே . . .

“பன்றிக் கறி தின்பவர்கள் மூளையும் பன்றியைப் போலவே இருக்கும்”

“ஆட்டுக் கறி தின்பவர்களுக்கு ஆட்டைப் போலவே மந்த மூளைதான்”

முட்டை சாப்பிடுபவர்கள் கோழியைப் போலவே குப்பையிலே அலைந்து கொண்டு குப்பையில் கிடைப்பதைத்தான் உண்பார்கள்”

இப்படி ஒரு மட்டமான சிந்தனை கொண்டவர் சிலை அமைப்பதென்பது சமூக சீர்திருத்தவாதியான ராமானுஜருக்குத்தான் அசிங்கம். மேலும் அந்த சிலை உருவாக்கப்பட்டது சீனாவில். ஒரு புறம் சீனாவை திட்டிக் கொண்டே சீனத் தயாரிப்பை திறந்து வைத்துள்ளார் மோடி. ஆக அவரும் சிலையை வைத்த சின்ன ஜீயரும்தானே  ஆண்டி-இந்தியர்கள்?

No comments:

Post a Comment