Monday, February 28, 2022

ரங்கசாமியையும் நக்கலடிப்பீர்களா மூடச்சங்கிகளா?

 


மோடி தரகு வேலை பார்க்கும் விமான நிறுவனங்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கான கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக பயணச் செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

முட்டாள் சங்கிகளுக்கு அது பொறுக்கவில்லை. அது எப்படி முடியும்! மீட்பு நடவடிக்கை ராணுவம்தானே செய்ய முடியும்! இவரால் எப்படி முடியும்! காமன் சென்ஸ் வேண்டாமா என்றெல்லாம் பிதற்றினார்கள். ஸ்டாலின் சொன்னது பயணச் செலவைப் பற்றி மட்டும்தான். அதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் ஐ.டி விங் கொடுத்த செய்தியை பரப்பி தாங்கள் எப்போதும் முட்டாள்கள் என்று நிரூபித்துக் கொண்டார்கள்.

உத்தர்கண்ட் வெள்ளத்தின் போது 60,000 குஜராத்திகளை 20 இன்னோவா கார்களில் மோடியே நேரடியாக மீட்டார் என்று நம்பி பரப்பிய முட்டாள் ஜென்மங்களும் இவர்கள்தான் என்பது வேறு விஷயம்.

இதோ இப்போது

புதுச்சேரி மாணவர்களின் பயணச் செலவை புதுவை அரசு ஏற்கும் என்று புதுவை முதல்வர் திரு என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை அரசு பாஜகவின் கூட்டணி அரசு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நக்கல் அடித்த மூடச்சங்கிகள், ரங்கசாமியையும் அதே போல் நக்கலடிப்பார்களா?

ஆம். 

ஏனென்றால் எடப்பாடிக்குப் பிறகு சிக்கிய அடிமையல்லவா அவர் !!!!

3 comments:

  1. சாமிகளை வைத்து அரசியல் செய்பவர்கள், சூப்பர்...

    ReplyDelete
  2. தூதகரம் சார்ந்த வெளியேற்றுதல் அல்லது காப்பாற்றுதலுக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. இதற்க்கு முன்னர் ஏமன்/ ஓமன், ஆப்கான், ஈராக்,சீனா போன்ற நாடுகளில் இருந்து மக்களை காபாற்றி அழைத்து கொண்டு வருவதற்க்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கபடவில்லை.
    இது உங்களுக்கு முதலில் தெரிந்து இருக்க வேண்டும். தெரிந்து கொண்டே தவறான பதிவு தேவையா? இதில் மாநில முதல்வர்களுக்கு எந்தவித அதிகாரமும் வேலையும் இல்லை. அவர்கள் செய்வது வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான். இதை தமிழக முதல்வர் செய்தாலும் புதுவை முதல்வர் செய்தாலும் சாதரண குடிமகனாக கண்டிக்க வேண்டும். அதை விடுத்து மேலும் மேலும் பொய் சொல்வதும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்று பிடிவாதம் பிடிப்பது அயர்சியை ஏற்படுத்துகிறது. எல்லாத்துக்கும் மோடியே காரணம் மோடி ஒயிக என்று ஒவ்வோரு பதிவிலும் பேசுவது பக்க சார்பில்லாத சாதரண வாசகர்களுக்கு எரிச்சலை தான் உண்டாக்குகிறது.

    என் உறவினர் மகன் உக்ரேனில் மருத்துவம் படித்தார். வருடம் 50 லட்சம் வரை செலவு செய்த்தகாக சொன்னார். என்னை பொருத்தவரை அங்கு மருத்துவம் படிப்பவர்கள் நல்ல வசதி படைத்தவர்கள். அவர்களிடம் பணம் வசூல் செய்வது தவறு இல்லை. உயிரா பணமா என்ற கேள்வி வரும் போது எது பெரிது? வசதி இருப்பவர்கள் கொடுக்கட்டும். 1.5 லட்சம் அவர்களுக்கு பெரிய பணம் இல்லை. சிங்கப்பூர் போகவே 75 ஆயிரம் ஆகிறது. தற்போது இந்திய அரசாங்கமே மீட்பு நடவடிக்கையில் இறங்கிய பின்னர் எந்தவித செலவும் இல்லை. உண்மையும் ஒத்து கொண்டு கடந்து சென்றால் மகிழ்ச்சி

    நட்புடந் கதிர்

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. த்மிழக முதல்வர் அறிவிப்பிற்குப்பின்பே ஒன்றிய அரசு செயல்படத் தொடங்கியது என்பதை மறக்கக் கூடாது. மேலூம் நான் சார்பானவன்தான். மோடி பிரதமர் என்பது தேசத்தின் மிகப் பெரிய துயரம். உருப்படியாக எதையும் செய்யாத அவரை வாழ்க என்று சொல்லுமளவிற்கு ஏதுமில்லை.

      Delete