Sunday, February 27, 2022

முதலாளிகளுக்கு மோடியின் சிக்னல்

 


"இந்திய மாணவர்கள் ஏன் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்க வேண்டும்? நம் தனியார் துறை இதனை கையிலெடுக்க வேண்டும்"

இது நேற்று மோடி உதிர்த்த முத்து.

இது முட்டாள்தனமான கருத்து என்பதை நேற்றைய

 அவர்களுக்கு தவிப்பு புரியாது என்ற பதிவில் வரும்

உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் எல்லா மாநிலத்திலிருந்தும்தான் செல்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒன்றும் செல்லவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியாமல்தான் செல்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவிற்கான கோடிக்கணக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் குறைந்த கட்டணத்தில் படிக்க கடன் வாங்கிச் செல்பவர்கள்தான்.

வரிகளைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆனால் மோடியின் முன்னெடுப்பு முட்டாள்தனமில்லை.

"நீங்கள் எவ்வளவு மருத்துவக் கல்லூரிகளை வேண்டுமானால் திறந்து கொள்ளுங்கள். கேதன் தேசாய், அன்புமணி போன்றவர்கள்தான் எங்கள் ஆட்சியில் உள்ளார்கள். அதனால் கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாம். தேர்தல் பத்திரம் மூலம் எங்களையும் கவனித்து விடுங்கள்" 

என்பதுதான் மோடி முதலாளிகளுக்கு கொடுத்துள்ள சிக்னல்.

ஆம். மோடி அவராகத்தான் மனதில் உள்ள உண்மையைச் சொல்லி மாட்டிக்கொண்டார்.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அனாமதேயமாக வந்தால் பதில் கிடையாது

      Delete
    2. கூடை வைச்சு இருக்கறவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாது.

      Delete