Thursday, February 3, 2022

காவி காக்கி களவுக் கூட்டு

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி கீழே உள்ளது.

சிலை கடத்தலுக்காக ராமநாதபுரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஏழு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு கைமாற உள்ள நிலையில் கைது நடந்துள்ளது.



கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் போலீஸ் என்பதும் ஒரு நபர் பாஜக நிர்வாகி என்பதும்தான் முக்கியமான செய்தியே.

காக்கிகளில் உள்ள களவாணிகளுக்கும் காவிகளுக்குமான கூட்டு என்பது இயல்பானதுதான்.

என்ன அந்த பாஜக நிர்வாகியின் பெயரையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம். இல்லையென்றால் அந்த சிலை திருடனை ஆட்டுக்காரரும் ஐகோர்ட் ராஜாவும் பெரிய தியாகி ரேஞ்சிற்கு பில்டப் செய்து விடுவார்கள்.

கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி வருகிறதல்லவா?

இந்த பதிவின் முகப்புக்கு எதற்கு திரிசூலம் படத்தின் டைட்டில்?

நாளை வழக்கு விசாரணையெல்லாம் வருகிற போது அய்யா மேற்கோள் காட்ட திரைப்படம் வேண்டுமல்லவா! அதனால்தான் அவருக்கு ஒரு ஸ்மால் ஹெல்ப்

No comments:

Post a Comment