Friday, February 4, 2022

ஆட்டுத் தாடியின் ஆணவம் . . .

 


உங்களால் ஒரு போதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று ராகுல் காந்தி மக்களவையில் முழங்கிய போதே நீட் மசோதா தொடர்பாக ஒரு அராஜகம் நிகழும் என்று எதிர்பார்த்தேன்.

அது போலவே நடந்து விட்டது. மசோதா திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.

ஏழை எளிய மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப் படுகின்றனர் என்பதுதான் நீட் எதிர்ப்பிற்கான அடிப்படை. அதை காரணமாக சொல்லி திருப்பி அனுப்பியதுதான் ஆட்டுத்தாடியின் கொழுப்பு.

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா! இது நாகாலாந்து இல்லை" என்றெல்லாம் முரசொலியில் எழுதியது திமுகவும் அரசும் ஆட்டுத்தாடிக்கு உணர்த்தி மாநிலத்தை விட்டே ஓட வைக்க வேண்டும்.

ராகுல் காந்தியை பப்பு என்று மோடி வகையறாக்கள் கிண்டல் செய்தாலும் அவருக்கு பயப்படுகின்றார்கள் என்பதை செய்கையால் காண்பித்து விட்டார்கள். சங்கிகள் மறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

ராகுல் காந்தி சபித்தது போல தமிழ்நாட்டை எந்நாளும் ஆள முடியாது என்பதை உணர்ந்த காரணத்தால்தான் வஞ்சிக்க தொடங்கி விட்டார்கள்.

1 comment:

  1. அடிமைகள் உள்ளனரே...

    ReplyDelete