Wednesday, August 8, 2018

அல்பர்களை அம்பலப்படுத்தியே சென்றுள்ளார் . . .



போய் வருக கலைஞரே . . .

உமது இறுதிப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்ற இடத்தில் இனியாவது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். . .

தமிழர்களின் எதிரிகள் யார் என்பதை உமது மரணத்திலும் அடையாளம் காட்டி விட்டுப் போயுள்ளீர்கள் . . .

மெரினாவிலே இடம் மறுத்தவர்கள்,
இடத்தை மறுக்கச் சொல்லி பின்னணியில் இருந்தவர்கள்,
இடம் இல்லை என்று மகிழ்ந்தவர்கள்.

இவர்கள் எல்லோருமே உம் இருப்பினால் அஞ்சியவர்கள்,
நேற்றைய இறப்பினால் உள்ளம் மகிழ்ந்தவர்கள்.

கட்டுக்கதை பரப்பியவர்கள் வழக்கம் போல 
முகத்தில் கரி பூசிக் கொண்டார்கள், பொய்யர்களாய்.

மெரினா மறுக்கப்பட்டால் கலவரம் வெடிக்கலாம் என்று
மனப்பால் குடித்தவர்கள் இப்போது மண்ணைக் கவ்வினார்கள்.

மோடியோ, அமித்தோ காலி நாற்காலிகளே வரவேற்கும்.
உமக்காக திரண்ட தொண்டர் கூட்டத்தை அது எப்படி சகிக்கும்?

வயிற்றெரிச்சல் பிடித்த அல்பர்கள் யார் என்பதை 
அரசியல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும்
அம்பலப்படுத்தியே சென்றுள்ளீர்கள்...

இனியாவது நிம்மதியாய் உறங்குங்கள்,
உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெற்ற இடத்திலே . . .




5 comments:

  1. இனியாவது நிம்மதியாய் உறங்குங்கள்-->ensure corruption is buried for ever, never to raise its evil head again.

    ReplyDelete
    Replies
    1. மதவெறி இடித்த காவி நச்சுப் பாம்புக் கூட்டம் தலையெடுக்க விடாமல் தடுத்தால் ஊழலும் புதையுண்டு போகும். மோடியை விட மிகப் பெரிய ஊழல் பேர்வழி உலகில் ஏது?

      Delete
  2. Karunanidhi was always 1000 times better than the convicted criminal Jaya.

    ReplyDelete
  3. சந்துல சிந்து பாடாதே காவிசனியனே... சைக்கிள் கேப்பில் உன்னோட வேலைய காட்டுறியே லூசு சங்கி.

    ReplyDelete