Thursday, August 2, 2018

போலீஸ் போட்ட "மொளகாத்தூள் சோறு"


தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முகநூல் பதிவு .

மல்லய்யாவின் சிறை அறை சொகுசாக இருக்க வேண்டும் என் வழக்கு நடக்கிற  நேரத்தில்தான் இதுவும் நடக்கிறது. 


சம்திங் சம்திங் திரைப்படத்தில் திரிஷா மீதான தனது காதலை நிரூபிக்க, தனக்குத் தரப்படும் மொளகாத்தூள் சோறை சாப்பிடுவாரே ஜெயம்ரவி, அதேபோல 8 வழிச்சாலையை எதிர்த்துப் போராடிய தோழர்களை காலை முதல் அடைத்துவைத்து, அதேபோன்ற மொளகாத்தூள் சோறை இரவு 11 மணிக்கு வழங்கியிருக்கிறது காவல்துறை. 

மக்கள் மீதான எங்கள் காதலை நிரூபிக்க இதெல்லாம் மாபெரும் தேர்வொன்றுமில்லை....

நிலா வெளிச்சத்தில் கூட்டமாக வட்டமாக உட்கார்ந்திருக்கிறோம் மகிழ்ச்சியாகவே...


ஏனெனில் "போராட்டமே வாழ்க்கை" எங்களுக்கு...

No comments:

Post a Comment