Sunday, August 26, 2018

கண்டோன்மென்ட்டின் நாய்க்காவல் படை !!!!!



ஐந்து நாட்கள் குடும்பப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலையில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கிய உடன் பார்த்த காட்சி.

பத்து நாய்கள் பிளாட்பார்மில் கூட்டமாக திரிகிறது. பயணிகளின் பைகளை மோப்பம் பிடித்து பின்னால் வருகிறது. குழந்தைகளும் கைக்குழந்தைகளை கையில் வைத்திருப்பவர்களும் அலறிக் கொண்டே வேகமாக விரைகிறார்கள்.

ரயில்வே காவலர்களுக்குப் பதில் இவர்களை காவலர்களாக பயன்படுத்துகிறார்களா என்று கூட சந்தேகம் வருகிறது..

இப்படி நாய்க்கூட்டம் பிளாட்பார்மிலே திரிவதை ரயில்வேதுறை கட்டுப்படுத்த வேண்டும்.




1 comment:

  1. குழந்தைகளையோ அல்லது கைக்குழந்தைகளை கையில் வைத்திருக்கும் பெண்களையோ நாய்கள் கூட்டம் கொடுமைபடுத்தினாலும், நாய்களை பாதுகாப்பதற்காகவே குழந்தைகள் பெண்களின் நலன்கள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா இருக்கிறார்.

    ReplyDelete