Saturday, August 18, 2018

நல்லதாய் எழுத ஏதுமில்லையே!



நாம் அமைதியாய் இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அனானிகள் விடவில்லை. 

கலைஞருக்கு அஞ்சலி எழுதிய நீ ஏன் இப்போது எதுவும் எழுதவில்லை என்று கேள்விகள் வந்தது.

என்ன செய்ய?

நல்லதாய் எழுத ஏதுமில்லையே!

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காட்டிக் கொடுத்ததும்

13 நாட்கள் ஆட்சிக்காலத்தில் எண்ரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மகாராஷ்டிர மாநில மின்சார வாரியத்தை கடனாளியாக்கியதும்

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவை வைத்திருந்ததும்

வளர்ப்பு மகளின் கணவனுக்காக யூனிட் ட்ரஸ்ட் நிறுவனத்தையே திவாலின் விளிம்புக்கு கொண்டு வந்ததும்

போன்ற 

செய்திகள்தானே

நினைவுக்கு வந்தது.

நல்லதாய் எழுத ஏதுமில்லை. விமர்சனத்தை முன் வைக்கும் நாள் இதுவில்லை என்று அமைதியாய் இருந்தாலும் வலுக்கட்டாயமாய் வம்பிழுத்தால் நான் என் செய்வேன்?

ஆனாலும் சொல்வேன்.

யாருடைய மரணத்திற்காகவும் மகிழ்கிற குறுகிய புத்தி என்றுமே எனக்கு கிடையாது. சங்கிகள் போல கொண்டாடும் மனநிலையும் கிடையாது.

நல்லதாய் எழுத ஏதுமில்லாததால் மௌனமாய் இருந்தேன். வலுக்கட்டாயமாய் பிடித்து இழுத்ததால் மௌனத்தின் காரணத்தை மட்டும் விளக்கியுள்ளேன்.

ஒரு மனிதர் என்ற முறையில் வருந்துகிறேன். 


3 comments:

  1. ஆத்தி.. இம்புட்டு இருக்கா.. அதோட இந்த புதிய பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் இவரது கைங்கிரியம் தான்

    ReplyDelete
  2. do need for crocodile tears from f* commies

    ReplyDelete